இந்த வையகம் முழுவதும்
நீ சிந்திய சிரிப்பொலியில்
சிதறிப்போய் கிடக்கின்றது
என் சிந்தனைகள்- தேடியெடுத்து
நெஞ்சோடு அணைத்து
பத்திரப்படுத்துகிறேன்
நான் கவிதையில்..!!!
காய்ந்த நிலமதில்
வீழ்ந்துடைந்துபோகும்
நீர்துளிகள் நீயாகிபோனாயடி
வறண்டுபோய்கிடந்த -என்
வாழ்க்கை வாசற்படியில்
கோலமிட்டு போகின்றது
உன் ஒன்றைகண் பார்வை..!!!
நீ மொளனமான பிறகும் கூட
வார்த்தைகள் ஒலிப்பதாய்
என் இதயம் மகிழ்கிறது
மறுவார்த்தை நீ பேசிடும்
போதுதான் அது உயிர்கொண்டு
துடிக்கிறது…!!!
மகிழ்சியை மட்டும்
தினம் கொடுப்பதாய்
சத்தியம் செய்த நீ
மோட்சத்தையும் கொடுத்தாயடி
உன் எச்சில் படாத முத்ததில்..!!!
#பிசாசு
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Sunday, July 2, 2017
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment