Sunday, July 2, 2017

என் யாதுமாகியவளே

இந்த வையகம் முழுவதும்
நீ சிந்திய சிரிப்பொலியில்
சிதறிப்போய் கிடக்கின்றது
என் சிந்தனைகள்- தேடியெடுத்து
நெஞ்சோடு அணைத்து
பத்திரப்படுத்துகிறேன்
நான் கவிதையில்..!!!

காய்ந்த நிலமதில்
வீழ்ந்துடைந்துபோகும்
நீர்துளிகள் நீயாகிபோனாயடி

வறண்டுபோய்கிடந்த -என்
வாழ்க்கை வாசற்படியில்
கோலமிட்டு போகின்றது
உன் ஒன்றைகண் பார்வை..!!!

நீ மொளனமான பிறகும் கூட
வார்த்தைகள் ஒலிப்பதாய்
என் இதயம் மகிழ்கிறது
மறுவார்த்தை நீ பேசிடும்
போதுதான் அது உயிர்கொண்டு
துடிக்கிறது…!!!


மகிழ்சியை மட்டும்
தினம் கொடுப்பதாய்
சத்தியம் செய்த நீ
மோட்சத்தையும் கொடுத்தாயடி
உன் எச்சில் படாத முத்ததில்..!!!

#பிசாசு

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...