சிதறிய எச்சில் துளிகள்தான்
மழைத்துளிகளோ??
வா அன்பே
நனையாலம்
ஒரு காதலின் முத்த எச்சினில்
எட்டி ஓடாதே
எனையும் அப்படி
ஏறெடுத்துப் பார்க்காதே..!!
முதல் துளி நெற்றியில்
என் முத்த புள்ளியும்
அதே இடத்தில்..!!!
ஆடைகள் நனைந்து
அங்கங்கள் கடந்து
துளிகள் பயணிக்கலாம்...
என் விழிகள் என்னவோ
உன் விழிதாண்டி போக
நினைக்கவில்லையடி..!!!
சகியே அண்ணைபோல்
உன் ஆடைகொண்டு
நீ என் தலைதுவட்டும்
அந்த நிகழ்வுகளுக்காவே
ஆயிரம் முறை நனையாலமடி..!!!
வா அன்பே
கோபங்கள் களைய
மழையில் நனையலாம்..!!!
பிசாசு



No comments:
Post a Comment