Tuesday, January 24, 2017

விதிவிலக்கா..!!!

காதல் தாகம் தீர்பாயென்று
தாகத்தில் தவித்தேன்
நீரூற்றாய் நீ வந்து தீர்த்தாயடி
காதல் தாகம்..!!!

உனை சேரவேண்டித்தான் 
தினம் நான் கொண்டேன் 
கவிதையில் யாகம்
நீ வந்து தந்தாயடி ஒரு காதல் வரம்..!!!

காலை பணியில் 
குளித்த மலர்களைளெல்லாம்
களவாடி தந்ததென்னவோ
உன் வெட்கத்தின் முடிவில் நான் 
விக்கி தவிப்பதற்காகதான்..!!!


சொர்கத்தையே தந்தாயடி
உன்னொரு வார்த்தையில் -என் 
வாழ்க்கையில் காதலை தந்து… 
திக்கித் திலைத்து திரிந்தேனடி நான்..!!!


காற்தடங்கள் சேரத்தான் காதல் நடை பழகினோம்
ஊரடங்கும் வேலையிலும் காதல் மொழி பேசினோம்
தடைகளையெல்லாம் உடைத்து காதல் வழி நடந்தோம்
உயிர் வரை சென்றா நாமின்று 
காதல் வலி பொருத்தோம்..???


சகியே…!!!!
பட்டாம் பூச்சிகள் ரசிப்பாயென்று
பூக்களை வளர்த்தவன் நான்..!!!
வானவில் உடுத்த வா என்று
மழையில் நனைந்தவனும் நான் தான்..!!!
மழலை மொழி பிடிக்குமென்பதால்
வார்த்தைகள் தொலைத்தவனானேன்
காலத்தை வெறுப்பதனால்தான்
காதலை தொலைத்தவனாகிபோவேன்..!!!


விதியென்று சொல்லி 
விலகி நீ நிற்க
தொட்டவளை நெஞ்சில் காதல் அம்பு 
விட்டவளை
எட்ட நின்றாவது ரசிக்கதான் தோனுகிறது
“உன் ஆழமான காதலை”


தனிமையை ஏற்று இனிமையை உருக்கி
நான் நமக்காய் செய்யும் யாகத்தில்
நானே தீயாய் போனாலும்
தேவதையே உனை மட்டும்
மறந்து போவேனென்று நினைக்காதே
சாம்பலாயானாலும்…!!!!

-பிசாசு-










Monday, January 23, 2017

அவளின் கண்ணக்குழியில் என் கல்லறை

விட்டுவிட்டு துடிக்கும்
இமையிரண்டுக்கும் இடையில்
சிக்கிகொண்டு தவிப்பதது 
விழிகளல்லடி
அது என்னுயிர்..!!!

உன் புன்னகையில் எப்போதும்
அழகாய் தெரிவதுண்டு
வெட்கத்தில் நீ ஒதுங்க
ஒன்றைக் கண்காட்டி ஓரமாய்
ரசிப்பதுமுண்டு..!!!

பக்கத்தில் நீயிருக்க பக்குவமாய்
பார்த்துக்கொள்ளும்
பாதி தூரம் நீ சென்று மறைய
தேடித் தேடியே உயிர் கசியுமடி
கண்ணீராய்..!!!

உன்விழிகளின் புன்னகை
ஆணுக்குள்ளும் வெட்கம் தந்தது
காதலுக்கும் முதல் தடம் பதித்தது..!!


உதட்டின் புன்னகையில் 
என்னுயிர் அறுத்து
நீ கண்ணக்குழியின் இடுக்குகளில்
ஓர் அழகான கல்லறைசெய்து 
வைத்ததாயென்று
அறியாது போனது என் காதல்..!!!

உனை அனைத்துக்கொண்டு
உறங்கிய நான் என் காதலில்..!!
உன் நினைவுகளை 
இழுத்துப் பிடித்தபடி
சரிந்துக்கிடக்கின்றேன் -நான்
கல்லறையில் உன் கண்ணக்குழியில்…!!!!

-பிசாசு-







தனிமை தாகம்


நிமிடங்கள் எல்லாம் நிலைகுலைந்து
யாரோ நீ யாரோ நான் என்று
முகம் திருப்பி முதுகுபுறம் 

காட்டிக்கொண்டு
அமர்ந்துகிடக்கின்றது..!!


சேர்ந்திருந்தே வாழ்ந்தோமென்று
நாளிகைகள் எல்லாம் நகராது
நமக்காய் காத்திருந்த 
காலங்கலெல்லாம்
கதைக்கதையாய் சொல்லி
கண்ணீர்விட்டு கதறியழுகின்து..!!!


விரல்கோர்த்து நீ கூட்டிவர
பாதைகள் நீள்வதைகூட
மறந்த மனமும் காதலும் உன்
அனைப்பில் ஒடுங்கிடந்தது 


எட்ட நீ தள்ளிபோனாலும்
கரம் பிடித்திழுத்து நெற்றில் வைத்த 
முத்ததின் ஈரமும் கூட இன்னமும் 
காயாதிருக்க -நாம் ஏன் 
கலைந்தோம்
காதல் தீவிலிருந்து…!!!

இனிமையாய் 
இருந்தவையெல்லாம்
கசப்பாகி இதயத்தை கசக்கி
வெளியே வீசியெறிகின்றதடி
இந்த தனிமை எனை கொன்று உன்
நினைவுகளுக்கு அரிதாரம்
பூசிக்கொள்கின்றதடி…!!!

-பிசாசு-



Tuesday, January 10, 2017

சின்னஞ் சிறு உலகைவிட்டு வெளியே வா மனமே….!!!

சாடிக்குள் முட்டிக்கொண்டு
வேடிக்கை பார்க்காதே இவ்வுலகை
நேசித்து ரசிக்க நெஞ்சம் கொள்
சுவாசித்து உணர்வுகளை 

வாசிக்க கற்றுக்கொள்..!!!

தோல்விகளில் வெற்றியை கற்றுக்கொள்
வெற்றியில் பணிவை தேடிக்கொள்
உயர்வில் உன்னை நீ தெரிந்துகொள்
உண்மையில் உன் 
உலகை பெரியதாய் மாற்றிக்கொள்..!!!


சின்னஞ்சிறு உலகில்
பொறாமை கழுகள் பறந்துதிரியலாம்
துரோக நாகங்கள் படமெடுத்து ஆடலாம்
நயவஞ்சக நரிகள் உனை சுற்றி 
நடமாடலாம் மறக்காதே..!!!

வட்டத்தை சுற்றியே ஓர் வாழ்க்கை வாழதே
சிறகு கொடுத்து சிகரம் தொட்டு வாழ
விரைந்து வா நீ மனமே..!!!

உனக்கான உலமமொன்றை 
படைத்துக்கொள்
அது கண்ணிலடங்காது
உன் சொல்லில் தொகுக்க முடியாது
நடந்து தொட்டுவிட முடியாதளவு
பெரிதாய் இருக்கட்டும்..!!!

வெளியே வா மனமே
இந்த சின்னஞ்சிறு உலகைவிட்டு
பறந்து நீ வா- அங்கும் உனக்காய் 
இருப்பிடமுண்டு
துடிக்கும் இதயமுண்டு
உன் எண்ணங்களுக்கு உயிருமுண்டு
வெளியே வா….!!!!
-பிசாசு-

வலிகளில்....

தனிச்சிறையொன்று
தேவையில்லை பெண்ணே
உன் மௌனப் பார்வை போதும்
தண்டிக்கப்பட..!!!

உயிர் மூச்சிவிட
வேண்டியதில்லை பெண்ணே
உன் சிறு விலகல் போதும்
இதயம் துடிப்பதை நிறுத்த..!!!

ஓர் ஜென்மம்
போதவில்லை பெண்ணே
உன் சம்மதம் தந்தபின்பு
வாழ்க்கையை வாழ்ந்துவிட...!!!

*********************************************************************************

வலியெது என்று தெரியவில்லை 
வலிக்கிறது மனது..!!!
உயிரது என்னிடமில்லை
உடலது எறிகிறது..!!! 
உறவென்று இங்கு ஒன்றுமில்லை 
உணர்வது அழுகிறது..!!!
காதலும் கடந்து போகிறது 
எதுவும் எனதாக இல்லையென்று...!!!

*********************************************************************************

மடிசாய்ந்து கிடக்க
இதயம் வருடியவள் நீ
மொழி மறந்து தவிக்க
வார்த்தைகள் கோர்த்தவள் நீ

தோற்றுபோய் கிடக்க
தேற்றியவள் நீ
இறந்துவிட நினைக்க
வாழ வைத்தவள் நீ

காலம் மறந்து கடக்க
காதல் காட்டியவள் நீ
வலிகள் மறைந்து போக
முத்தமிட்டவள் நீ

*********************************************************************************



Monday, January 9, 2017

முடியுமா???

உன் ஒற்றை வார்த்தையில்
பிரிவை தந்து -என் மனத்தை
ரணமாக்கினாய் காதலை
மெளனமாக்கினாய்..!!!


சில தருணங்களில்
நாமிருந்த நிமிடங்களை
மறந்தே போனதாய் 
நிகழ்வுகளை
கேள்விக்குள்ளாக்கினாய்..!!!


உன் கண்ணில் 
என் இதழ்கள்
பதித்த சத்தமில்லா முத்தத்தை…!!
நெற்றிபொட்டில் நான் வைத்த
முத்தப்பொட்டை..!!


விரலோடு விரல் கோர்த்து
வரைந்த 
காற்றோவியத்தை..!!!
காதோடு நான் பேசிய
காதல் காவியத்தை…!!!

உச்சி முதல் பாதம் வரை
நித்தம் ஓடிய -என் 
சுட்டு விரல் தடத்தை..!!!


உன் குன்டான 
நாசி மேல்
தினம் மேய்ந்த -என் மீசையை..!!!
உன் மார் போடு சாய்ந்து 
நான் வைத்த காதல் 
முத்தத்தை..!!!

குத்தவேயில்லை என்று
தாடிக்குள்  கொட்டிய  ஆயிரம் 
குட்டி முத்தத்தை..!!!


இப்படி எதை வேண்டுமானாலும்
உன் உடலால் மறக்க முடியலாம்..!!!


சகியே
நாம் என்ற ஒற்றைசொல்லில்
நானும் நீயும் சேரந்த காதலை..?

உன் உள்ளத்தால்??
??????????????????????????????????
-பிசாசு-

உன் மௌனம்

சொல்ல மறுக்கும்
உன்சின்ன மெளனத்திற்கு நடுவில்
என் மொத்த மொழிகளையும்
வாரிக்கொண்டாய்..!!!


ஊடல் நீ கொண்டாய் என்று
ஒதுக்கிடவும் முடியவில்லை
கோபம்தான் கொண்டாய் எப்படியென்று
கோபிக்கவும் இயலவில்லை
இரண்டுக்கும் நடுவில் எனை
இம்சை செய்கிறாய்
பிடிவாதக்காரியாய்….!!!


உன்னுள்ளே இருக்கும் ஓரனப்பில்
நீ பார்க்கும் பார்வையில்தான்
என்னிதயம் லேசாகுமென்றால்
உன் மௌனத்தை இப்படியே
வைத்துக்கொள்- நான் தினம் தினம்
வார்த்தைகளை தேடியே திறிகின்றேன்..!!!


மெளனம் கலைத்து பேச நீ விரும்பினால்
இறுதியாய் ஓர் வழி செய்
அஞ்சலில்
“காதல் அஞ்சலியாய்”
இல்லையேல்
கண்ணீர் அஞ்சலியாய்..!!!
-பிசாசு-

Thursday, January 5, 2017

துளிர் விடும் நினைவுகள்

பசுமையாய் இருந்த 
நினைவுகள் எல்லாம் 
ஏனடி இன்று சுமையாகிப் போனது..!!!
கண்விழித்த போது காட்சிகளாய் 
இருந்த நீயே
கண் அயர்ந்த போது 
கனவுகளில்  வந்து விழுந்தாய்..!!

உன் நினைவுகளே முப்பொழுதும் 
எனை சுற்றிவர 
ஒரு பொழுதும் மறக்கவில்லையடி
நான் உனை..!!!

மடியில் தவழ வைத்து 
மார்போடு எனை அணைத்து 
காதல் தாலாட்டு பாடி சீராட்டி 
கவிதைகளை எழுத வைத்தவள் நீ தானடி..!!

எழுதிய கவிதைகள் 
முடிவுகளைக் காணாது 
முடமாகிக் கிடக்கின்றது என்னோடு சேர்ந்து 
மடிசாய நீ இல்லாது..!!! 

பட்டுப் போய் கெட்டுப்போய் கிடந்த 
கவிதைகள் எல்லாம் 
திரும்பி நீ... நின்று ஒரு பார்வை வீச 
சட்டென்று துளிர்கிறதடி 
கவிதைகள் எல்லாம் 
நம் காதலின் நினைவுகளாய்...!!! 
-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...