Thursday, May 2, 2019

நினைவால் தீ அணைப்பேன்..!!!




நினைப்பதற்கு பல நினைவுகள்

இருந்தபோதும் உன் நினைவை விட

இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை எனக்கு..!!!

நீ யாரென்று தெரியாமல் தொடங்கிய
என் காதல் கதையில
நீதான் கருவானாய்.- என் உயிரின்
கதாபாத்திரமானாய்..!!!

என் வாழ்க்கை புத்தகத்திற்கு
முகவுரை எழுதுவதற்காக - நான்
என் இதய பக்கங்களை திறந்து
வைத்தேனடி சகி
நீ எழுதி வைத்தாய் ஓர் அழகான
கவிதை புத்தகத்தை..!!!



பக்கமாய் நீ இருக்கும் போது
உன் கக்கத்தில் நான் இருப்பேன்
கொஞ்சம் தூரமாய் நீயிருக்கையில்
உனை காற்றாய் நான் தொடுவேன்...!!!

பார்க்கின்றபோது காதலால் நான் இழைத்தேன்
பார்க்காது தவிகின்றபோது கவிதையால்
உனை ரசித்தேன்..!!!













வெட்கமாய் நீ விழி மூடுகையில்
வெப்பமாய் உனை தீண்டினேன்..!!
தெப்பமாய் நான் நனைந்து
நினைவால் தீ அணைப்பேன்..!!!


இதற்கு மேலும் என்னடி சொல்ல
எனக்காக உன்னை நீ கொடுத்துவிடு 
என்னையே உனக்காய் எழுதிக்
கொடுத்த பிறகு….!!!







-பிசாசு-😈😈😈😈

மைதீட்டும் கண்கள்
இன்றேனோ பொய் 
தீட்டிக்கொள்கிறது
எனை கொல்கிறது...!!!

மெய் தீண்டா காதலில்
உண்மை உருகிட
உடல் முழுவதும்
தீ பற்றிக்கொள்கின்றது...!!!

வலிக்கிறது வாழ்க்கை
கனக்கிறது காதல்
மறைகிறாய் நீயும்
மரணிக்கிறேன் நானும்
இனி நம் காதல் என்னாகுமோ
அநாதையாகி கிடக்குமோ???

பிசாசு😈😈😈
நானும் 
எழுதிக்கொண்டுதான் 
இருக்கின்றேன் 
என் காதலை

நீயும் 
வாசித்துக்கொண்டுதான்
இருக்கின்றாய்
எழுத்துப்பிழைகளை

#பிசாசு😈😈😈

Sunday, February 10, 2019

எது எமை கடந்து போயினும்
எது எமை மறந்து போயினும்
எதில் நம் உரிமை இழந்து போயினும்
எதில் நம் உணர்வு இறந்து போயினும்


அவமானங்கள் அணிவகுத்து
தகுதிகள் எதுவென்று விரல் நீட்டி
கேள்விகள் கேட்பினும்..!!!

ஒன்றை மட்டும் நீ மறந்துவிடாதே
உனக்கு நீயே உரிமை
உனக்கு நீயே உணர்வு
உனக்கு நீயே உறவு
உன் புன்னகையே
அதற்கு பதில்..!!

-பிசாசு-
நீ இல்லை என்ற பின்
நிஜம் என்னடி
நிழல் என்னடி
நினைவிலும் தீயடி..!!


நான் இல்லை என்ற பின்
நலம் இல்லையடி
நாம் இல்லையடி
நாவிலும் மௌனமடி..!!

காதல் இல்லை என்ற பின்
கனவென்னடி
கதையென்னடி
கவிதைகளிலும் வலிதானடி..!!


-பிசாசு-

Saturday, February 9, 2019

உனக்கும் எனக்கும் 
தாய்மொழி ஒன்றுதானே 
தொணிகள் வேறானபோதும்…!!! 

உனக்கும் எனக்கும் 
ஏக்கங்கள் ஒன்றுதானே 
காரணங்கள் வேறானபோதும்….!!!! 

உனக்கும் எனக்கும் 
நாடு ஒன்றுதானே 
ஊர்கள் வேறானபோதும்..!!!! 

சகியே… 

நீயும் நானும் 
வேறு வேறுதான் 
இருந்தும் 
வேர் ஒன்றுதான் 
அது காதல் தானே..!!

-பிசாசு-

Wednesday, January 23, 2019

தொல்லையாகி
போவதனாலா-எனை நீ
நகர்ந்திருக்தான் சொல்கிறாய்

விலகி இருக்கவா..???
விலகாதிருக்கவா..???
தொலைந்து போகவா..???
-பிசாசு-

காதல் எதிரிகளே..!!

நன்றிகடன் பட்டுவிட்டேன்
உங்கள் நா இறைக்கும்
வார்த்தைகளுக்கு

நினைவில் நிறுத்திக்கொள்ளுங்க
மனம் மாற்றி இடம் மாற்ற
நீங்கள் விதிக்கும் வியூகங்கள் எல்லாம்
வீணாய் போய்விடலாம் ஒருநாள்..!!!

சிறு துளியில் உருவாகி
உடல் கொண்ட மனிதரெல்லாம்
உயிர்கொண்டு வாழ தேவையொன்று
உண்டு- அது அன்பென்று வேறெது??
அன்பிலே உருவான
காதல் ஏன் இன்று
தீண்டாமையானது???

நீங்கள் எழுதிய சாசனத்தில்
காதல் வசனத்தில்
காதலின் தகுதி என்ன பணமா??
ஜாதிக்கு முதலிடமா??
வசதிக்கு கட்டாய ஒதுக்கீடா??
கௌரவத்திற்கு என்றொரு சிம்மாசனமா??
இவைதான் உங்கள் பார்வையில் காதலென்றால்
அன்புக்கு மட்டும் அங்கு அறைகுறையா???



காதலை மனம்விட்டு பிரிப்பதும்
ஓர் உடலை கூட்டமாய் நின்று
அம்மணமாக்கி பார்பதுமொன்றே
உங்களுக்கு அது ஓருவித சுகமாகலாம்
காதலித்த இதயத்திற்கு அது ரணம் தான்…!!!


பிரித்துவைத்து சிரிக்கின்றீர்கள்
வெறுத்து போகவே நினைக்கின்றீர்கள்
மறந்து வாழ சொல்கின்றீர்கள்
மனம் மாற்றிட துடிக்கின்றீர்கள்
மறு மணம் எற்க கட்டாயடுத்துகின்றீர்கள்..!!!



என் வம்புக்குறிய

காதலின் எதிரிகளே...!!!
உங்களுக்கு என் நன்றிகள்
எங்கள் காதலின் அழவை
உணர்த்திவிட்டமைக்கு
புனிதமதை புரியசெய்தமைக்கு
இதயம் இரண்டை இன்னும் அதிகமாய்
காதலிக்க தூண்டியமைக்கு..!!!

ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்

எவை என்ன செய்தாலும்
எனைவிட்டு அவளும் என்னவளும்
அவளின்றி நானும் அவளானவனும்
உறுதியாய் ஓர் வழிகொண்டோம்
சேர்ந்திருப்போம் தனியாய்
காதல் சுமந்திருப்போம் உயிராய்..!!

-பிசாசு-

நான் என்றும் நீ தான்

என் இரவோடு நான் காணும்
கனவுகளும் நீ தான்

என் இரு கண்ணில் தோன்றும்
ஒரு காட்சியும் நீ தான்

என் வார்த்தைகளில் பிறக்கின்ற 
வலிமையும் நீ தான்

என் மௌனத்தில் உருவான 
அமைதியும் நீ தான்

என் மொழிகளில் வாழ்கின்ற 
தொன்மையும் நீ தான்

என் வழியில் பூக்கின்ற 
பூக்களும் நீ தான்

என் வாழ்வில் வந்த 
வசந்தமும் நீ தான்

விரல் பிடித்து நடந்த
 குழந்தையும் நீ தான்

அடம்பிடித்து இடம்பிடித்த 
இம்சையும் நீ தான்

என் நெஞ்சில் ஒரு கணம் அக்கினியாய்
சுட்டவளும் நீ தான்

மறுகணமே பக்கதில் வந்து 
முத்தமிட்டவளும் நீ தான்

காதல் காட்டியவளும் நீதான்
என்னில் காயங்கள் 
கூட்டியவளும் நீ தான்

நான் என்றும் நீ தான்
நீயென்றும் நான்தான்

இறுதிவரை என்றும் நாம் “காததலில்” தான்..!!!

-பிசாசு-
 

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...