Monday, April 23, 2018

வலியினில் உதிரும் வரிகள்

முற்றுப்புள்ளி இட முடியும்
என்னுள் இருக்கும் எதற்க்கும்
உன் அன்பிற்க்கு மட்டும்

முற்றுப்புள்ளியும் இட முடியாது
முதல்புள்ளியும் இட முடியாது

………………………………………………………………

என்னை
கொன்றுவிடும் வார்த்தைகளையும்
வென்றுவிடும் வார்த்தைகளையும்

உன்னால் 
மட்டுமே தர முடியும்

அடிக்கடி வெல்வதைவிட
கொல்கின்றாய்

……………………………………………………………….

உன்னை விட முடியாது
என்று அடம்பிடிக்கும் 
அளவுக்கு
அன்பை 
அள்ளித்தந்துவிட்டாய் என்னிடம்

மீண்டும் 
தாரை வார்த்துக்கொடுக்கச் 
சொல்கிறாய்
உன் குடும்பத்திற்கு..???


……………………………………………………………

மலையில் இருந்து விழுந்தும்
மரணம் இல்லை எனகென நினைத்தேன்
உன் மனதில் இருந்து விழுந்ததால்
உயிரோடு மரணிக்கின்றேன்


…………………………………………………………..


விட்டுக்கொடுப்பதிலும் ஒருவித
அன்பு சிதைபட்டுக்கிடக்கின்றது
என் காதலை உனக்காய்
உன் காதலை எனக்காய்
நம் காதலை எவருக்காய்..???

………………………………………………………
விடிந்ததொரு பொழுதில்
முடிந்துபோகுமென்று 
நினைக்கவில்லை
நம் காதல்- நம் காதல்
முடிந்துபோகும் நிலை வந்தால் 

நான்
மரணித்துபோவேன் 
என்றதனை யாது நீ
மறந்தாயோ..???

-பிசாசு-
அதிகமாக நேசித்ததற்கு 
ஆதாரமாய்
காயங்களும்  நமக்குள்..!!!

ஆழமான காயத்திற்கு 
ஆதாரமாய்
கண்ணீரும் நமக்குள்...!!! 

காதலை நேசிக்காத உன்னுறவுகள் 
காயத்தை தருவது சுலபம்
என்னை நேசித்த-  நீ 
காயங்கள் தருகையில்
கடந்துவருவதுதான் கடினம் -நான்

-பிசாசு-


இதழைவிட 
இருமடங்கு
இதயம் பேசுகிறது நீ 
என்னருகில் 
இருந்திடும் வேளையில்...!!!


இதயத்தை விட 
விழிகள் அதிகமாய் 
கொஞ்சிகின்றது நீ 
மடிசாய்ந்துறங்யைில்...!!!

-பிசாசு-

இதயம்

உயிரோசையில் 
உயிர்வாழ்ந்திடும் போது
"இதயம்"
கடிகாரமாய்
காட்சியளித்தது

வாழ்க்கை பயணத்தில் 
வந்தவர்கள் தங்கிபோனபோது
"இதயம்"
அறையாக காட்சியளித்தது

நேசித்தவர்களே உடைத்தபோது
"இதயம்"
கண்ணாடியாய்
காட்சியளித்தது

உறவெல்லாம்
கானல்நீரென
உணர்ந்தபோது
"இதயம்"
அனாதையாக
காட்சியளித்தது

தனிமைத்தீயில்
எரிந்தபோது
"இதயம்"
உயிர்களற்ற
பாலைவனமாய்
காட்சியளித்தது

நமக்காக மட்டும்
இன்னொரு இதயம் துடிப்பதை கண்டு
"இதயம்"
சோலைவணமாய் காட்சியளிக்கின்றது..!!!

-பிசாசு-


Friday, April 20, 2018


நெடுந்தூர பயணமதில் நீ 
துணையாக வேண்டும்
இளைபாறிட 
வேண்டுகையில் உன் மடி 
எனை தாங்க வேண்டும்

முடியாததொரு
வானமாய் அது என்றும்
நீள வேண்டும்
ஒரு வேளை
அது முடிகின்ற வேளை வந்தால்
உன் மடியிலே- நான்
இறக்க வேண்டும்...!!!

#பிசாசு😈😈😈😈

சகியே…..

உன் நிழலில் அமர்ந்தே
என் ஆயுள் கூடுதடி
உன் உயிரில் கலந்தே
அது நூறுஜென்மம் ஆகுதடி


சகியே…..

என் காதலுக்கு உன் உயிரை கொடுத்தாய்
அது உரு பெற்றதடி

என் கவிதைகளுக்கு உன் ஆயுள் கொடுத்தாய்
அது உயிர் பெற்றதடி 

என் கனவுகளுக்கு உன் நிறம் கொடுத்தாய்
இரவுகள் முடியாது தொடறுதடி

என் கண்களுக்கு உன் பார்வை கொடுத்தாய்
உலகமே உன்னால் அழகானதடி


மறுஜென்மம் ஒன்றை தந்தாய்
எத்தனை முறை நான் இறந்தாலும்
என்னோடு இறந்து
எனக்கெனவே நீயும் மறுபடியும்
பிறக்கின்றாய்

#பிசாசு😈😈😈

Wednesday, April 18, 2018

அலையின் சத்தம்
கரையின் காதுகளுக்கு
எட்டியும்
அமைதி நிலவுவது போலொரு
என் அழுகையின் சத்தம்
இதயம் எட்டியும்
மௌனம் கொள்வதேனோ..???

.....................................................................

மௌனங்கள் உடையட்டுமன்பே
வார்த்தைகள் கோர்த்திட
மொழியே நீ
வா...!!!

வலிகள் மறையட்டுமன்பே
காயங்கள் ஆற்றிட நிலாவே நீ
வா..!!!

கோபங்கள் தீரட்டுமன்பே
மோகங்கள் உயிர்பெற உயிரே நீ
வா...!!!

பிரிவுகள் கரையட்டுமன்பே
உணர்வுகள் உருபெற சுஜா நீ
வா..!!!
-பிசாசு-

கழுத்தில் தாலி கட்டி #புதுதம்பதிகளாக
இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னால்
எப்ப #பார்த்தாலும்இது தானா என்றால்
இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
அடுப்பு வீட்டில் யாரும் #கவனிக்காத போது அவள் கழுத்துக்கு கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னால்
என்ன இது #குழந்தைகள வச்சிக்கிட்டு
என்றால்
சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கு விழுந்து
பழைய #நினைவுகலுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன் அப்போது அவள்
சொன்னால்
வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா
என்றால் அவள்
கடைசியாக அவளை என் வீட்டுல்
ஊரார் குளிப்பாட்டி #திருமணபட்டுஉடுத்தி
படுக்கையில் கிடந்தவளை #முத்தமிட்டேன்
அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தால்
கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல்

இறுதிவரை #நேசியுங்கள்
அவள் வழி துணையாக வந்தவள் அல்ல
அவள் வாழ்க்கை துணையாக வந்தவர்

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...