Monday, April 23, 2018

இதயம்

உயிரோசையில் 
உயிர்வாழ்ந்திடும் போது
"இதயம்"
கடிகாரமாய்
காட்சியளித்தது

வாழ்க்கை பயணத்தில் 
வந்தவர்கள் தங்கிபோனபோது
"இதயம்"
அறையாக காட்சியளித்தது

நேசித்தவர்களே உடைத்தபோது
"இதயம்"
கண்ணாடியாய்
காட்சியளித்தது

உறவெல்லாம்
கானல்நீரென
உணர்ந்தபோது
"இதயம்"
அனாதையாக
காட்சியளித்தது

தனிமைத்தீயில்
எரிந்தபோது
"இதயம்"
உயிர்களற்ற
பாலைவனமாய்
காட்சியளித்தது

நமக்காக மட்டும்
இன்னொரு இதயம் துடிப்பதை கண்டு
"இதயம்"
சோலைவணமாய் காட்சியளிக்கின்றது..!!!

-பிசாசு-


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...