Monday, April 23, 2018

வலியினில் உதிரும் வரிகள்

முற்றுப்புள்ளி இட முடியும்
என்னுள் இருக்கும் எதற்க்கும்
உன் அன்பிற்க்கு மட்டும்

முற்றுப்புள்ளியும் இட முடியாது
முதல்புள்ளியும் இட முடியாது

………………………………………………………………

என்னை
கொன்றுவிடும் வார்த்தைகளையும்
வென்றுவிடும் வார்த்தைகளையும்

உன்னால் 
மட்டுமே தர முடியும்

அடிக்கடி வெல்வதைவிட
கொல்கின்றாய்

……………………………………………………………….

உன்னை விட முடியாது
என்று அடம்பிடிக்கும் 
அளவுக்கு
அன்பை 
அள்ளித்தந்துவிட்டாய் என்னிடம்

மீண்டும் 
தாரை வார்த்துக்கொடுக்கச் 
சொல்கிறாய்
உன் குடும்பத்திற்கு..???


……………………………………………………………

மலையில் இருந்து விழுந்தும்
மரணம் இல்லை எனகென நினைத்தேன்
உன் மனதில் இருந்து விழுந்ததால்
உயிரோடு மரணிக்கின்றேன்


…………………………………………………………..


விட்டுக்கொடுப்பதிலும் ஒருவித
அன்பு சிதைபட்டுக்கிடக்கின்றது
என் காதலை உனக்காய்
உன் காதலை எனக்காய்
நம் காதலை எவருக்காய்..???

………………………………………………………
விடிந்ததொரு பொழுதில்
முடிந்துபோகுமென்று 
நினைக்கவில்லை
நம் காதல்- நம் காதல்
முடிந்துபோகும் நிலை வந்தால் 

நான்
மரணித்துபோவேன் 
என்றதனை யாது நீ
மறந்தாயோ..???

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...