கரையின் காதுகளுக்கு
எட்டியும்
அமைதி நிலவுவது போலொரு
என் அழுகையின் சத்தம்
இதயம் எட்டியும்
மௌனம் கொள்வதேனோ..???
.....................................................................
மௌனங்கள் உடையட்டுமன்பே
வார்த்தைகள் கோர்த்திட மொழியே நீ
வா...!!!
வலிகள் மறையட்டுமன்பே
காயங்கள் ஆற்றிட நிலாவே நீ
வா..!!!
கோபங்கள் தீரட்டுமன்பே
மோகங்கள் உயிர்பெற உயிரே நீ
வா...!!!
பிரிவுகள் கரையட்டுமன்பே
உணர்வுகள் உருபெற சுஜா நீ
வா..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment