என் ஆயுள் கூடுதடி
உன் உயிரில் கலந்தே
அது நூறுஜென்மம் ஆகுதடி
சகியே…..
என் காதலுக்கு உன் உயிரை கொடுத்தாய்
அது உரு பெற்றதடி
என் கவிதைகளுக்கு உன் ஆயுள் கொடுத்தாய்
அது உயிர் பெற்றதடி
என் கனவுகளுக்கு உன் நிறம் கொடுத்தாய்
இரவுகள் முடியாது தொடறுதடி
என் கண்களுக்கு உன் பார்வை கொடுத்தாய்
உலகமே உன்னால் அழகானதடி
மறுஜென்மம் ஒன்றை தந்தாய்
எத்தனை முறை நான் இறந்தாலும்
என்னோடு இறந்து
எனக்கெனவே நீயும் மறுபடியும்
பிறக்கின்றாய்
#பிசாசு



No comments:
Post a Comment