மௌனங்களை எடுத்தெறிந்து
என் மீது வீசுகின்றாய்
வார்த்தைகள் எல்லாம் காயப்பட்டுபோகின்றது..
காதலித்தது தவறென்று பட்டிமன்றம் நடத்துகின்றாய்
என் வார்த்தைகளை களவாடி
முடிவை நீயே எழுதி வைக்கின்றாய்…
…………………………………………………………………………………………………………………………..
எனதான அனைத்தும் உனதானபின்பும் கூட
இன்னும் ஏன் சந்தேகப் பார்வை..???
காதல் உண்மைதானென காண்பிக்க வேண்டுமென்றால்
பொய்யாகவேனும் நீ என்னை நேசித்தாக வேண்டும்
என் கரம் பற்றிடும் நேரமும் கூடவா உணராது போகின்றது
இது உண்மை காதல்தானென்று???
……………………………………………………………………………………………………………………………
விட்டுக்கொடுக்க தெரியவில்லை என்பதில்
வெட்டுப்பட்டு காயப்படுகின்றது காதல்
காயம்கொடுத்து தேகம் அணைத்து
மோட்சம் கொடுப்பதுமட்டுமா காதல்???
காயம் கொடுக்காது பார்த்துக்கொள்வதல்லவோ காதல்..!!!!
…………………………………………………………………………………………………………………………..
என் உடல் நடுக்கி உயிர் அடக்கி
ஆளச்செய்யுமுன்
ஆளச்செய்யும் உன்
மௌனத்தை என்று நீ பொசுக்கியெறிந்து
என் முன்னே பேசப்போகின்றாயடி சகி..???
அன்றுதான் மீளுயிர் பெறுமென் ஆவி..!!!!
………………………………………………………………………………………………………………………..
ஒளியது நீயென்று தான் என் இருள் விழக்கி
ஓடிவந்தேன் உன் சந்நிதி தேடி…
வழிகாட்டி வந்துசேரும் முன்
கர்ப்பகிறக வாசலையேனடி மூடினாய்???
மீண்டும் நான் மீளமுடியாது வீழ்ந்தகிடக்கின்றேன்
பயம்வந்து கொள்ளும்
ஓர் காரிருள் பிடிக்குள்……!!!!!
………………………………………………………………………………………………………………………
மரணம் வரை நீ வருவாயென்றுதான்
நான் வாழவே ஓர் பேராசை கொண்டேன்
ஓர் திருமணம்
ஓரிரு குழந்தைளோடு நம் இரு மனம்
ஓர் மனதாகி- நரை வந்து சேர்ந்தும்
குறைவில்லாத காதலன்பு கொண்டு
மாறாத நீயும் விட்டு போகாத நானும்
ஒன்றாகி மரணிக்கவே கண்ட என் கனவெல்லாம்
ஓர் கடும் மழைத்துளியில்
தடம் காணாது அழிந்துபோகும்
கோலமாய் நீரோடு கலந்தோட
யாருமில்லா இந்த இராபொழுதில்
கண்ணிரோடு நான்…!!!
-பிசாசு-
……………………………………………………………………………………………………………………