Monday, January 29, 2018


மரணம் வரை நீ 
வருவாயென்றுதான் 
நான் வாழவே ஓர் பேராசை 
கொண்டேன்


ஓர் திருமணம்
ஓரிரு குழந்தைளோடு 
நம் இரு மனம்
ஓர் மனதாகி- நரை வந்து சேர்ந்தும்
குறைவில்லாத 
காதலன்பு கொண்டு
மாறாத நீயும் 
விட்டு போகாத நானும்
ஒன்றாகி மரணிக்கவே 
கண்ட என் கனவெல்லாம்
ஓர் கடும் மழைத்துளியில்
தடம் காணாது அழிந்துபோகும்
கோலமாய் நீரோடு கலந்தோட
யாருமில்லா இந்த 
இராபொழுதில்
கண்ணிரோடு நான்…!!!

-பிசாசு-
ஒளியது நீயென்று தான் 
என் இருள் விழக்கி
ஓடிவந்தேன் உன் சந்நிதி தேடி…

வழிகாட்டி வந்துசேரும் முன்
கர்ப்பகிறக வாசலையேனடி 
மூடினாய்???

மீண்டும் நான் 
மீளமுடியாது 
வீழ்ந்தகிடக்கின்றேன்
பயம்வந்து கொள்ளும்
ஓர் காரிருள் பிடிக்குள்……!!!!!
-பிசாசு-
என் உடல் நடுக்கி 
உயிர் அடக்கி
ஆளச்செய்யுமுன் 
ஆளச்செய்யும் உன்
மௌனத்தை என்று நீ 
பொசுக்கியெறிந்து
என் முன்னே பேசப்போகின்றாயடி 
சகி..???

அன்றுதான் 
மீளுயிர் பெறுமென் 
ஆவி..!!!!

-பிசாசு-

விட்டுக்கொடுக்க 
தெரியவில்லை என்பதில் 
வெட்டுப்பட்டு காயப்படுகின்றது 
காதல்

காயம்கொடுத்து 
தேகம் அணைத்து 
மோட்சம் கொடுப்பதுமட்டுமா 
காதல்???

காயம் கொடுக்காது 
பார்த்துக்கொள்வதல்லவோ 
காதல்..!!!!
-பிசாசு-


எனதான அனைத்தும் 
உனதானபின்பும் கூட
இன்னும் ஏன் 
சந்தேகப் பார்வை..???


காதல் உண்மைதானென 
காண்பிக்க வேண்டுமென்றால்
பொய்யாகவேனும் நீ என்னை 
நேசித்தாக வேண்டும்

என் கரம் பற்றிடும் 
நேரமும் கூடவா உணராது போகின்றது
இது உண்மை காதல்தானென்று???

-பிசாசு-
மௌனங்களை எடுத்தெறிந்து
என் மீது வீசுகின்றாய்
வார்த்தைகள் எல்லாம் 
காயப்பட்டுபோகின்றது..

காதலித்தது தவறென்று 
பட்டிமன்றம் நடத்துகின்றாய்
என் வார்த்தைகளை களவாடி
முடிவையும் நீயே எழுதி வைக்கின்றாய்
-பிசாசு-
உன் நினைவுகளை
அள்ளி எடுத்து தின்றுவிடுகின்றேன்
தீயாய் எனை 

சுட்டெறிக்கின்றது…

நீ விட்டுசென்ற துப்பட்டாவை
எடுத்து போர்த்திக்கொள்கின்றேன்
உடல் முழுவதும் முள்ளாய் 

குத்ததுகின்றது…

உன் உருவமதை என் கண்களில்
தொட்டு அப்பிக்கொள்கின்றேன்
கண்ணீரிலே  உடல்
குளிக்கின்றது….

உன் முத்தங்களை நினைத்து

வளியில்
ஒத்திக்கொள்கின்றேன்
காற்றும் வெறுப்பை கொட்டி 

தீர்கிக்கின்றது...


நீ தந்த காதல் பரிசுகளை எடுத்து 
அணைத்துறங்குகின்றேன்
தாங்க முடியாதோர்
கதகதப்பை 
தருகின்றது...

எதுவும் வேண்டமென்று
எனை நானே தீயிலிடுகின்றேன்
தீயிலும் நீ வந்து எனை 

தீண்டாதிருக்க
மோட்சம் தர 
மறுக்கின்றது..!!!

-பிசாசு-

நீயே உலகம் என்று
உன் வழியே என் வாழ்ககையென்று
சிறுபிள்ளையாய் உனை சுற்றி வந்தேன்
உயிர் கொண்ட அன்பையும்
உடன் தந்துவந்தேன்- தகுதியில்லையென
நிராகரிக்கப்பட்ட 
நானும்
நிலையில்லாது போனது அன்பும்..!!!



சிரிக்க கற்றுக்கொண்டேன்
இதயம் கிளிந்து
கண்ணகளில் ஒழுகி- உன் நினைவுகள்
சுடும் நேரங்களிலும்..!!!




நிஜமாகவே 
என் கனவுகளைக் கூட
ஒடித்து விட்டு
அதிலும் கூட வலிதனை கொடுத்து 
கடந்து போகின்றாய் நீ- கனவுகள்
கலைந்து தூக்கம் தொலைக்கிறேன் நான்..!!!

Thursday, January 25, 2018

ஞாபக சின்னங்கள்..!!!

யாரோடும் பேசாத
உன் வார்த்தை வரமாக
எனக்கு மட்டும் சொந்தமான
நிமிடங்கள் உனக்கு ஞாமபகமிருக்கிறதா..???


உன் ஒவ்வொரு சொல்லும்
என்னை சிலிர்க்க வைத்து


என் ஒவ்வொரு சிரிப்பும்
உன்னை மலர வைத்த காலங்கள்
உனக்கு ஞாபகம் இருக்கிறதா…???


மணிக்கணக்கில் தினம் பேசி
மௌனங்களையும் மொழியாக்கி
மாலை பொழுது வரை
காதல் வழி நடந்தது
உனக்கு ஞாபகமிருக்கிறதா..???


விடை பெறும் நொடிகள்
ஏக்கங்கள் எமைதாக்க
முடியாதொரு நிலையில்
பார்வைகளும் பரிதவித்தது
உனக்கு ஞாபகம் இருக்கிறதா..????

விடை பெற்ற உனக்காக ‘காத்திருப்பேன் நான்’
என்றதும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா..???

முத்தங்கள் நான் கொடுக்க
வெட்கத்தில் எனை நீயணைக்க
காற்றும் சில்லென்று காதல் மொழி
பேசியது உனக்கு ஞாபகமிருக்கிறதா..???


சகியே…
எதை நீ மறந்தாயே
அவையெல்லாம் எனக்கு ஞாபகசின்னங்கள்
எதனாலெனை வெறுத்தாயோ
இது மட்டும் நானறியா ரகசியங்கள்…!!!


-பிசாசு-

Tuesday, January 9, 2018

வலியது காதலா??

மௌனங்களை எடுத்தெறிந்து
என் மீது வீசுகின்றாய்
வார்த்தைகள் எல்லாம் காயப்பட்டுபோகின்றது..

காதலித்தது தவறென்று பட்டிமன்றம் நடத்துகின்றாய்
என் வார்த்தைகளை களவாடி
முடிவை நீயே எழுதி வைக்கின்றாய்…
…………………………………………………………………………………………………………………………..
எனதான அனைத்தும் உனதானபின்பும் கூட
இன்னும் ஏன் சந்தேகப் பார்வை..???

காதல் உண்மைதானென காண்பிக்க வேண்டுமென்றால்
பொய்யாகவேனும் நீ என்னை நேசித்தாக வேண்டும்
என் கரம் பற்றிடும் நேரமும் கூடவா உணராது போகின்றது
இது உண்மை காதல்தானென்று???
……………………………………………………………………………………………………………………………
விட்டுக்கொடுக்க தெரியவில்லை என்பதில் 
வெட்டுப்பட்டு காயப்படுகின்றது காதல்
காயம்கொடுத்து தேகம் அணைத்து 
மோட்சம் கொடுப்பதுமட்டுமா காதல்???
காயம் கொடுக்காது பார்த்துக்கொள்வதல்லவோ காதல்..!!!!
…………………………………………………………………………………………………………………………..
என் உடல் நடுக்கி உயிர் அடக்கி
ஆளச்செய்யுமுன் 
ஆளச்செய்யும் உன்
மௌனத்தை என்று நீ பொசுக்கியெறிந்து
என் முன்னே பேசப்போகின்றாயடி சகி..???
அன்றுதான் மீளுயிர் பெறுமென் ஆவி..!!!!
………………………………………………………………………………………………………………………..
ஒளியது நீயென்று தான் என் இருள் விழக்கி
ஓடிவந்தேன் உன் சந்நிதி தேடி…
வழிகாட்டி வந்துசேரும் முன்
கர்ப்பகிறக வாசலையேனடி மூடினாய்???
மீண்டும் நான் மீளமுடியாது வீழ்ந்தகிடக்கின்றேன்
பயம்வந்து கொள்ளும்
ஓர் காரிருள் பிடிக்குள்……!!!!!
………………………………………………………………………………………………………………………
மரணம் வரை நீ வருவாயென்றுதான் 
நான் வாழவே ஓர் பேராசை கொண்டேன்
ஓர் திருமணம்
ஓரிரு குழந்தைளோடு நம் இரு மனம்
ஓர் மனதாகி- நரை வந்து சேர்ந்தும்
குறைவில்லாத காதலன்பு கொண்டு
மாறாத நீயும் விட்டு போகாத நானும்
ஒன்றாகி மரணிக்கவே கண்ட என் கனவெல்லாம்

ஓர் கடும் மழைத்துளியில்
தடம் காணாது அழிந்துபோகும்
கோலமாய் நீரோடு கலந்தோட
யாருமில்லா இந்த இராபொழுதில்
கண்ணிரோடு நான்…!!!
-பிசாசு-
……………………………………………………………………………………………………………………

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...