யாரோடும் பேசாத
உன் வார்த்தை வரமாக
எனக்கு மட்டும் சொந்தமான
நிமிடங்கள் உனக்கு ஞாமபகமிருக்கிறதா..???
உன் ஒவ்வொரு சொல்லும்
என்னை சிலிர்க்க வைத்து
என் ஒவ்வொரு சிரிப்பும்
உன்னை மலர வைத்த காலங்கள்
உனக்கு ஞாபகம் இருக்கிறதா…???
மணிக்கணக்கில் தினம் பேசி
மௌனங்களையும் மொழியாக்கி
மாலை பொழுது வரை
காதல் வழி நடந்தது
உனக்கு ஞாபகமிருக்கிறதா..???
விடை பெறும் நொடிகள்
ஏக்கங்கள் எமைதாக்க
முடியாதொரு நிலையில்
பார்வைகளும் பரிதவித்தது
உனக்கு ஞாபகம் இருக்கிறதா..????
விடை பெற்ற உனக்காக ‘காத்திருப்பேன் நான்’
என்றதும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா..???
முத்தங்கள் நான் கொடுக்க
வெட்கத்தில் எனை நீயணைக்க
காற்றும் சில்லென்று காதல் மொழி
பேசியது உனக்கு ஞாபகமிருக்கிறதா..???
சகியே…
எதை நீ மறந்தாயே
அவையெல்லாம் எனக்கு ஞாபகசின்னங்கள்
எதனாலெனை வெறுத்தாயோ
இது மட்டும் நானறியா ரகசியங்கள்…!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment