Thursday, January 25, 2018

ஞாபக சின்னங்கள்..!!!

யாரோடும் பேசாத
உன் வார்த்தை வரமாக
எனக்கு மட்டும் சொந்தமான
நிமிடங்கள் உனக்கு ஞாமபகமிருக்கிறதா..???


உன் ஒவ்வொரு சொல்லும்
என்னை சிலிர்க்க வைத்து


என் ஒவ்வொரு சிரிப்பும்
உன்னை மலர வைத்த காலங்கள்
உனக்கு ஞாபகம் இருக்கிறதா…???


மணிக்கணக்கில் தினம் பேசி
மௌனங்களையும் மொழியாக்கி
மாலை பொழுது வரை
காதல் வழி நடந்தது
உனக்கு ஞாபகமிருக்கிறதா..???


விடை பெறும் நொடிகள்
ஏக்கங்கள் எமைதாக்க
முடியாதொரு நிலையில்
பார்வைகளும் பரிதவித்தது
உனக்கு ஞாபகம் இருக்கிறதா..????

விடை பெற்ற உனக்காக ‘காத்திருப்பேன் நான்’
என்றதும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா..???

முத்தங்கள் நான் கொடுக்க
வெட்கத்தில் எனை நீயணைக்க
காற்றும் சில்லென்று காதல் மொழி
பேசியது உனக்கு ஞாபகமிருக்கிறதா..???


சகியே…
எதை நீ மறந்தாயே
அவையெல்லாம் எனக்கு ஞாபகசின்னங்கள்
எதனாலெனை வெறுத்தாயோ
இது மட்டும் நானறியா ரகசியங்கள்…!!!


-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...