Monday, January 29, 2018


மரணம் வரை நீ 
வருவாயென்றுதான் 
நான் வாழவே ஓர் பேராசை 
கொண்டேன்


ஓர் திருமணம்
ஓரிரு குழந்தைளோடு 
நம் இரு மனம்
ஓர் மனதாகி- நரை வந்து சேர்ந்தும்
குறைவில்லாத 
காதலன்பு கொண்டு
மாறாத நீயும் 
விட்டு போகாத நானும்
ஒன்றாகி மரணிக்கவே 
கண்ட என் கனவெல்லாம்
ஓர் கடும் மழைத்துளியில்
தடம் காணாது அழிந்துபோகும்
கோலமாய் நீரோடு கலந்தோட
யாருமில்லா இந்த 
இராபொழுதில்
கண்ணிரோடு நான்…!!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...