மரணம் வரை நீ
வருவாயென்றுதான்
நான் வாழவே ஓர் பேராசை
கொண்டேன்
ஓர் திருமணம்
ஓரிரு குழந்தைளோடு
நம் இரு மனம்
ஓர் மனதாகி- நரை வந்து சேர்ந்தும்
குறைவில்லாத
காதலன்பு கொண்டு
மாறாத நீயும்
விட்டு போகாத நானும்
ஒன்றாகி மரணிக்கவே
கண்ட என் கனவெல்லாம்
ஓர் கடும் மழைத்துளியில்
தடம் காணாது அழிந்துபோகும்
கோலமாய் நீரோடு கலந்தோட
யாருமில்லா இந்த
இராபொழுதில்
கண்ணிரோடு நான்…!!!
-பிசாசு-
No comments:
Post a Comment