அன்புக்கும் ஆசைக்கும் பஞ்சமில்லா
சொர்க்கமது..!!!
வாசங்கள் வீசும் பூக்களும் தோற்றுப்போகும்
அழகிய நந்தவன சோலையது..!!!
ஆசைக்கொன்று ஆஸ்த்திக்கொன்று
அற்புதமாய் செதுக்கி வைத்த கோவிலது..!!!
பார்பவரெல்லாம் பழகிப்பார்க ஏங்கும்
அன்பான உறவுகள் வாழும் இல்லமது..!!!
சோறோடு பாசம் பினைந்து ஊட்டியவள் தாய்
உறவோடு அறிவூட்டி ஆழாக்கியவன் தந்தை
சண்டையிலும் சமரசம் பேசும் சுட்டியவள்
கடமையையும் காதலிக்கும் கன்னியமவன்..!!!
நூறாண்டு வாழ தவம் கொண்ட வாழ்வில்
வாரிசுகளுக்கு வரம் கொடுத்துவிட்டு
பாதியில் சிறகுதொடுத்து
போகின்றன கோவிலின் பலிபீடங்கள்…!!!
விதைகளாய் தூவி
வேலியாய் பயிர் காத்த இரு உயிர்கள்
விடைபெற்று போக
வாடி நிற்கின்றன
ஆசையும் ஆஸ்த்தியும் வேலியை பார்த்து..!!!
வாடி நிற்கின்றன
ஆசையும் ஆஸ்த்தியும் வேலியை பார்த்து..!!!
--பிசாசு-