Wednesday, November 23, 2016

வேலிகளை இழந்த வயல் நிலங்கள்

தேடித் தேடி கட்டிய சிறு கூடு அது
அன்புக்கும் ஆசைக்கும் பஞ்சமில்லா
சொர்க்கமது..!!!
வாசங்கள் வீசும் பூக்களும் தோற்றுப்போகும்
அழகிய நந்தவன சோலையது..!!!

ஆசைக்கொன்று ஆஸ்த்திக்கொன்று
அற்புதமாய் செதுக்கி வைத்த கோவிலது..!!!
பார்பவரெல்லாம் பழகிப்பார்க ஏங்கும்
அன்பான உறவுகள் வாழும் இல்லமது..!!!

சோறோடு பாசம் பினைந்து ஊட்டியவள் தாய்
உறவோடு அறிவூட்டி ஆழாக்கியவன் தந்தை
சண்டையிலும் சமரசம் பேசும் சுட்டியவள்
கடமையையும் காதலிக்கும் கன்னியமவன்..!!!

நூறாண்டு வாழ தவம் கொண்ட வாழ்வில்
வாரிசுகளுக்கு வரம் கொடுத்துவிட்டு
பாதியில் சிறகுதொடுத்து
போகின்றன கோவிலின் பலிபீடங்கள்…!!!

விதைகளாய் தூவி 
வேலியாய் பயிர் காத்த இரு உயிர்கள் 
விடைபெற்று போக
வாடி நிற்கின்றன
ஆசையும் ஆஸ்த்தியும் வேலியை பார்த்து..!!!
--பிசாசு-

Monday, November 21, 2016

அவளோடு ஒரு கனவு

ஓர் சந்திப்பில்
காதல் மையல் கொண்டு
மேகத்துள் ஒளிந்த நிலவாய்- எனக்குள் நீ
மறைய நான் மயங்கித்தான் போனேன்
உன் மடியழகில்..!!!

விரலோடு விரல் கோர்த்த கணம்
உயிரோடு உயிர் சேர்த்து கட்டிவைத்தது
காதல்..!!!

மாரோடு நீ சாய மறுகணமே
நான் தாயாக மாற
தாலட்டும் கூட தானாய் பிறந்தது..!!!


உச்சிமுதல் பாதல் வரை
எத்தனை மச்சங்கள் விரல்கள் தேடலில்
குதிக்க- கண்களும் கூடவே
கணக்கெடுப்புக்களில்
தவறவில்லை..!!!


நீ அழகி
என்பதை நானறிவேன்
பேரழகியும் நீயே தான்
வெட்கத்தில் இன்றறிந்தேன்..!!!

காற்று பட்டு திறக்கும் மொட்டாய்
என் இதழ் பட்டு திறந்ததடி
உன் மீன்விழிகள்…!!!


கவிதைகள் இடம் மாறியது
நம் இதழ்கள் வழியில்
முடிவதாயுமில்லை 

உன்னிதழ் பக்கங்களில்
எழுதுகின்ற என் இளமை கவிதைகள்..!!!


நெருப்பிலும் நீர்துளி சிரிக்குமா..???
உணர்ந்தேன் உன் தேக சூட்டில்
என் வியர்வை துளிகள் முத்தாக…!!!


“போதுமடா மச்சம் பார்த்தது
மிச்சமாய் ஏதேனும் வைத்துவிடு” என்ற உன்
இமை துடிப்பில் நான் ஒடுங்கிபோனேன்..!!!

அடுத்த கணமே
விழித்துபார்கிறேன் அது ஒரு கனவு..!!!

சில்லென்ற காற்று போர்வையின்
இடைவெளிகளில் சில்மிசம் செய்ய
இழுத்து மூடிய போர்வைக்குள்
உறங்கிப்போனேன்
மிச்சமாய் இருந்த
மச்ச கனவுக்காய்…!!!
-பிசாசு-

Sunday, November 20, 2016

அணையாத நெருப்பு..!!!

காடுகளாய் கிடந்த எம் நாட்டை களையெடுத்து 
கற்பாறைகளை தவிடுபொடியாக்கி
உயர் நிலமேறி புது ஊரென உருவாக்கி
“சிலோனுக்கு” உலகமெல்லாம்
தேயிலையில் அடையாளம் கொடுத்தவர்
கள்ளத்தோணி என்று வஞ்சித்த எங்கள்
பரம்பரைதான்…!!!


மாசிக்கும் தேங்காய்க்கும் ஆசைகொண்டு
நாடுதாண்டிய கூட்டம்தானென
வரலாறு எழுதியவர் ஏறாழம்- எழுதியதை
எதைகொண்டு மாற்றிட..???


கொழுந்து கூடைகளையும்
கவ்வாத்து கத்திகளையும் கொண்டு
நாம் படைத்தோம் புது தேயிலை வரலாற்றை..!!!


ஆண்டு அனுபவிக்க தகுதியுடைய நாங்கள் எல்லாம்
நாண்டுகொண்டு சாக- எம் சவத்திலும்
சாக்கடை அரசியல் பேசியவரும் இன்னமும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறனர்
ஈனபிறவியொன்று…!!!


பிறந்த மண்ணைவிட்டு
புறம்காட்டி ஓடிடவும் முடியாது
தமிழ் தாய் பாலுட்டி வளர்த்ததால்..!!!
இறந்தாலும் இனியொரு
புதுவிதி செய்வோமென்று போராடி
அட்டைக்கடி இரத்தத்தில் நீராடி
வாழ பழகியதால்…!!!


அன்று எவனோ ஒருவன் ஏற்றிய நெருப்பு
இன்றும் அணையாது எறிகின்றது எம் முன்
பத்தடி கொண்ட வீட்டு லயமாய்…
அரசியல் நாடகமாய்…..
வருமான ஏய்பாய்…
பணச்சுறண்ணடலாய்…
உரிமை மீறலாய்…
-பிசாசு-

நிழலாடும் நினைவுகள்

கண் மூடி உனை நான் கனவுகளிலும்
காதல் செய்வேன்- நிஜமாக நீ என்னுள்
உயிரோடி கிடக்கின்ற போதும்…!!!

நீயும் நானும் சந்திக்காத போதும்
ஒருவரையொருவர் காதலை 
சிந்தித்தோம்..!!!

தனித்தனியே காதல் கொண்டும்
தனிமையில் எமை நாம் 
வஞ்சித்தோம்..!!!

இன்று நீயும் நானும் நாமாகி
உயிராய் ஓர் உறவாகி காதலில் 
தித்தித்தோம்..!!!



உன் வெட்கங்கள் உடைத்து
நீ கொட்டித்தீர்தாய் உன் காதலை
நான் என் கவிதைகளை கடன் கொண்டு
முட்டி மோதினேன்..!!!



நிஜமாகவே
இன்னமும் ஆச்சரியம் தானடி
ஏன் நீ என்னுள் விழுந்தாய்
நானெப்படி உன்னுள் 
தொலைந்தேனெற்று..!!!


தேடித் தேடி தீராத காதலை நீ தந்தாய்
இனி நாம் கூடிக் கூடி காதல் செய்வோமடி..!!!


நிஜங்கள் எல்லாம்
நம்முள் நின்றாட தினம் தினம்
காதலும் கவிதைகளுமாய்
என்னுள் நிழலாடிக்கிடக்க
மீண்டும் மீண்டும் நானுள்ளே
உயிராடிப் போகின்றேனடி…!!!!

-பிசாசு-

Saturday, November 12, 2016

“மீனு குட்டி”

அனிச்சம் பூவின் நகலே
அன்பே என் ஆயுளின் முழு தவமே..!!!
வரத்தினை தந்துவிட்டு நீ ஏன்
காற்றிடை கலந்தாயே பூவம்மா
வேரோடு அறுந்தாயே..!!


உன்னை அனைத்த நெஞ்சில்
இன்னமும் வாசனை தீரலையே..!!!
சுவாசத்தில் சேரும் முன்பே யாரம்மா..??
மூச்சினை தடுத்தாரே..???

அம்மா என்றும் அழைத்தாய்
செல்லமாய் அப்பன் என்றும் அழைத்தாய்
உன்னை நான் அழைக்ககையிலே
“மீனு குட்டி” காதுகள் அடைத்தாயே
குட்டிமா எழுந்து நீ வாராயோ..???


தேடிவந்த தெய்வமே
உன்னை நான் ஓடிவந்து அனைத்தேன்
கூடி வாழும் முன்பே
ஏனம்மா கூடுவிட்டு பிரிந்தாய்
செல்லமே நாடி நரம்பை அறுத்தாய்..!!!

பாடிய பாடல் கோடி
உன்னோடு ஓடிதிரிந்த நாட்கள் தேடி
அலையும் எந்தன் ஆவி
குட்டிமா..
மீண்டும் பிறந்த நீ வாராயோ
அப்பனின் அழுகுரல் கேக்கலையோ..???


-மகளை இழந்த ஒரு தந்தைக்காக...
                     பிசாசு


Friday, November 11, 2016

அவளும் நானும் காதலும்

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைள் அணைத்தும் 
நீயாகிறாய்

பின் என்ன‌தான் செய்வ‌து
உன்னை காதலிப்பதை தவிற..!!!
******************************************************************

இற‌கு தொலைத்த‌
ப‌ற‌வை போல‌
உன்னை தேடுகின்றேன்
வ‌ன‌மெல்லாம்

எங்காவ‌து உன் வாச‌த்தின்
சாய‌லில் நான் விழ்ந்து கிட‌க்கின்றேனா
என்று தேடிபார்த்து..!!!

******************************************************************


ஆயிர‌ம் முறை சொன்னாலும்
அறிவே இல்லை உன‌க்கு என்று
முத்த‌மிடுகின்ற போதெல்லாம்
யுத்த‌மிடுகின்றாய் என்னோடு..!!!

ச‌ளைக்காம‌ல் எச்சிலை துடைத்து
ச‌த்த‌மில்லாம‌ல் உன் க‌ன்ன‌ம்
காட்டுகின்றாய் மீண்டுமொரு முத்தத்துக்காய்..!!!

இம்சையே..!!!
ச‌த்த‌திற்காக‌ யுத்த‌மிடுகிறாயா..???
இல்லை இதழ்
முத்த‌திற்காக‌ ச‌த்த‌மிடுகிறாயா..???


****************************************************************


என் சுவாச சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை சித்தரிப்பேன்...!!!

வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை செய்யவேன்..!!!

உன் பேரழகில்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்..!!!

மேகத்தால் உனக்கொரு
மெத்தையிட்டு
மழை மேகமாய் உனை நனைத்து
பெண் வாசனை நுகர்வேன்..!!!

உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்

அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும் அருகிலிருப்பேன்

****************************************************************

முத்தத்தோடு 
கொஞ்சம் சத்தம் சேர்த்தேன்
நீ வெட்கம் கொள்ளும்
அழகை ரசிக்க..!!!

வெட்கத்தோடு 
முத்தத்தையும் 
நீ பரிசளித்தாய்- வேடிக்கையில்
நான் வியர்த்து நிற்க..!!!

காதல் மட்டுமில்லையடி
காமமும் கூட கூடிபோய் கிடக்கின்றது
நீ என்னவள் எனக்கானவள் என்பதால்..!!!
-பிசாசு-





Wednesday, November 9, 2016

என்னுயிரே..!!!

உன் புன்னகையால்
வெளிச்சம் கூட்ட நேர்ந்தால்
இரவுகளும் 
விழித்திருக்க கூடும்..!!!

உன் விரல்களால்
வண்ணம் தீட்டுவதாக இருந்தால்
நிலாக் கூட வண்ணமாய் 
மாறியிருக்க கூடும்..!!!


உன் கண்ணகளால்
உலகை காண கிடைத்தால்
கிரகங்கள் அணைத்தும் 
சுவாசிக்க கூடும்...!!!

உன் உயிரால்
எனை நீ தாலாட்ட முடிந்தால்
மீண்டும் நான் குழந்தையாய் 
பிறக்கவும் கூடும்...!!!
-பிசாசு-
வாழ்க்கை
நாம் கணக்கு பார்க்க
முடியா விறுவிறுப்பாக திசை மாறி
பயணப்பட வைக்கும் சுவாரசியம்....

கொட்டுகிறது வெண்பனி
பார்க்க அதுவும்
பாம்பை போல் அழகு
பாதம் பதித்து சென்றேன்
என் பலாச்சுழை உதடு முதல்
பாதம் வரை வெடித்து வருகிறது
ரத்தம்
எத்தனை கிறீம் பூசியும்.....


யுத்த பூமியில்
இல்லா தனிமையும் வெறுமையும்
சமாதான நாட்டில்
சுற்றி வர தெரிந்தும் தெரியாமலும்
பல முகங்களும் போலியான சிரிப்பும்
நலவிசாரிப்பும் 
திசை மாறிய வாழ்க்கையில்....


செல்வச் செழிப்பிற்கு பஞ்சமில்லை
பணம் கொடுத்தும் வாங்க அன்பில்லை
விற்பவர்களை தேடி
போலிகளிடம் ஏமாறி
தனிமைத் தீவில் தள்ளி
காலில் தளை தனை பூட்டி
வந்தோம் வாழ்ந்தோம் எனும் அந்த நொடியில்
மனமோ யுத்தமே என்றலும்
நம் நாடாகுமா என்ற ஏக்கங்களுடன்
திசை மாறிய வாழ்க்கையில்
பயணிக்கிறது.....

சிறிமதி.

Monday, November 7, 2016

ஒரு நாளில் சந்திப்போம்

கோவில் படியேறவில்லை
தவம் ஏதும் கொள்ளவில்லை
அக்கினியிலும் கால் பதிக்கவில்லை
அலகு குத்தி நேத்தி செய்யவில்லை
உனை காணவேண்டி கடவுளிடம்
கை கூப்பிடவுமில்லை- இவையேதும் செய்யாது
எதிர்பாராமல் கிடைத்தவள் நீதானடி
மாறிவந்த கோலமில்லை
எனை தேடிவந்த வரமேதான் நீ..!!!

பேசிடத்தான் வார்த்தைகள்
தேடினோம்
வாழ்ந்திடத்தான் புது காதலையும்
நாடினோம்- காணாத போது
கைப்பேசி வழியே நிமிடங்கள்
முழுதும் கலந்தோம்..!!!
குரல் கேட்காத பொழுதெல்லாம்
குறுஞ்செய்தி வழியே
குறைவின்றி மொழிந்தோம்..!!!

நித்தமும் சத்தங்களோடு
முத்தங்களும் பொழிந்தோம்..!!!
நீயும் நானும் நாமாகவே
நமக்குள் காதலாகவே
தாம்பத்தியம்
வளர்த்தோம்..!!!

புகைப்படங்கள்
இடம்மாறியது நம் இதழ் பழங்கள்
இன்னும் சுவை கூடியது..!!!

கற்பனையில் நீ என்னோடு வாழ்கிறாய்
கவிதையில் நான் உன்னோடு கரைகிறேன்
நாம் சந்திக்கும் நாட்கள்
வெகுதொலைவில் இல்லை


வெட்கங்களை கொஞ்சம்
ஒத்திகை செய்துகொள் பெண்ணே..!!!
நம்மை கண்டு காதலும்
ரசித்து வெட்கம் கொள்ள வேண்டும் ..!!!
-பிசாசு-

Sunday, November 6, 2016

சகியே..

சகியே..
உன் இடையை சுற்றி
தவழும் புடவையின்
சின்ன நூலாக மாற 
தவமிருந்திருக்கிறேன் ..!!!


நீ மார்போடு
அணைக்கும் புத்தகமாய்
நானிருக்க கூடாதா
என அழுதுமிருந்திருக்கிறேன்..!!! 


வெட்கத்தை விட்டு சொல்கின்றேனடி 
உனது  பூம்பாதம் தாங்குகின்ற
பூமியாகக் கூட  பிறந்திருக்க கூடாதா என
என்னையே நான்
நொந்திருக்கிறேன்...!!!

உன் கால்களில்
தழுவும் கொலுசுகளின்
மீது பொறாமைப் பட்டிருக்கிறேன்
அதன் ஓசையிலும் நான்
ஒழிந்திருக்க கூடாதா என்று எனை நானே
வருந்தியிருக்கிறேன்...!!!


உன் விரல் தீண்டிய 
கைகுட்டையாய் நான் நெய்யப்பட்டிருக்க 
கூடாதா என்று -நீ கண்ணீரில் விழும்போது
ஏங்கியிருக்கிறேன்..!!!

ஒவ்வொரு 
அசைவிலும் உன் இடை நடுவில்
தொலைந்து போய்விட கூடாதா
என்று- இன்று நான் 
காத்திருக்கிறேன்..!!!
-பிசாசு-


Friday, November 4, 2016

முறிந்த காதல்

முறிந்த காதல்
முறிந்தது காதல்

ஒளிச்சு ஒளிச்சு பேச்சுமில்லை
தனிமை சிறையுமில்லை
கொண்டாட்டம் நண்பர்கள் பட்டாளமுடன்
கும்மாளம் குடும்பத்துடன்.....

முறிந்த காதல்
முறிந்தது காதல்

தூக்கம் தொலைக்கா இரவுமில்லை
உனக்கான காத்திருப்புமில்லை
தலையணை நனையும் தேவையுமில்லை
போர்வைக்குள் தொலைபேசிக்கும் வேலையுமில்லை......

முறிந்த காதல்
முறிந்தது காதல்

கண்ணுக்குள் நீ ,
இதயத்தில் உன் உருவம்
பசி மறந்தேன் என்ற
பொய்யான வார்த்தையில்லை
வட்ஸ் அப்பில் வேலையில்லை
முகநூலில் கவிதையில்லை
வீணடிக்க நேரமில்லை
வீணான செலவுமில்லை.....

முறிந்த காதல்
முறிந்தது காதல்

எனையும் நேசிப்பேன்
மழலைகளையும் கொஞ்சுவேன்
கிழவனுக்கும் காதல் சொல்வேன்
குறுகுறுப்பும் படபடப்பும் எனக்கில்லை ...

சுவாசிக்கிறேன் முறிந்த காதல் என்று
நிம்மதியாகிறேன் முறிந்தது காதல் என்று.....

முறிந்த காதல்
முறிந்தது காதல்


-சிறிமதி-

Thursday, November 3, 2016

நீ -நான்-நாம்- சிறு பிரிவு

விடியும் பொழுதும் உன்னோடு
முடியும் மாலையும் உன் நினைவோடு
தொட்டுச்செல்லும் காற்றும் 
உன் பரிசத்தோடு
பட்டுத்தெறிக்கும் நீர் குமிழும்
உன் அழகோடுதான் என -என் நிமிடங்கள்
கடந்துபோகின்றதடி சகியே..!!!


சின்ன சின்ன சண்டைகள் கூட
சுகங்களாக நமக்குள் ஆறுதலுக்கு
அன்னையாக நீ மட்டும்தான்
இன்று எனக்குள்..!!!

ஒவ்வொரு வைகறை பொழுதையும் நான்
வாரியனைத்து புது நாட்களாய் மாற்றியது
நீ என்னோடு இருக்கும் 
நாளிகைகளுக்காகத்தான்..!!!
நான் பசியாற மறக்கும் போதெல்லாம்
நீயேதான் வந்தாய் நிலா சோறாக…!!!
பசியாறி கிடந்தேன் உன் காலடியில்தான்
காதல் ருசிகூட உணர்ந்தேன்
உன் இதழ்களில்தான்..!!!



என்னுயிரே..!!!
என்னோடு நீயிருந்து 
உன்னோடு எனை கட்டிவைத்து
அழகுபார்தவளும் நீதான்..!!!

என்னை மனிதனாக மாற்றி 
மகிழ்ச்சி தந்தவளும்
நீ மட்டுமேதான்..!!!


இரவோடு நிலவாக
வானோடு நீலமாக
என்னோடு நீயிருந்த நேரமெல்லாம்
இனிக்குதடி- பத்துநாளாய் உனை
பார்க்காது எப்படியிருப்பேன் என்று
உள்ளே பைத்தியமும் 
பிடிக்குதடி…!!!!


உறவுகளை தேடி நீ போக போகின்றாய்
என் உறவான உன்னை விட்டு நான்
எப்படியடி உயிர் வாழப்போகிறேன்..????

நீயில்லாத பொழுதுகளில்…

தனிமையில் உனை களவாடிட போகிறேன்
நிமிடங்களில் உன் புன்னைகையை
சிறைவைக்கப்போகிறேன்..!!!
இரவுகளில் உன் மடியில் 
தலையசைக்கபோகிறேன்
கனவுகளில் உன்னோடு 
கதைபேச போகிறேன்..!!!


தீயின் மேல் அமர்ந்து உன் 
வருகைக்காய்
தவம் கிடக்கபோகிறேன்..!!!
காலங்கள் மறந்து கவிதையில் 
உன்னோடு
கட்டியனைத்து கிடக்கப்போகிறேன்..!!!


நீ நானாய் திரும்பி வரும் வரை
நான் நீயாய் உருமாறி உன்
உயிரில் கலந்து உயிர்வாழப்போகிறேன்
என்னுயிரே…!!!!
-பிசாசு-



எதிர் பாராத சந்திப்பு!!!

தமிழ் அன்னையவள்
தந்த பொக்கிஷமே!!!
தேன் சிந்தும் தமிழால் 
எனைத் தீண்டியவனே!!!
நான் செய்த புண்ணியத்தால் 
நட்பெனக்களித்த..
நன்கொடை நீயடா!!


பத்துமாதம் சுமக்கவில்லை...
பத்தியமும் காக்கவில்லை!!!
மார்மீதும் அணைக்காத உன்னை..
மகனாக சுமக்கின்றேன் என் இயத்தில்!!!


கவியால் எனைத்்தீண்டி..
கருத்துக் கேட்டு களவு
கொண்டனையோ எனை??
மகனே உன் முகம் காணாமலேயே 
களவு போனேன் உன்னிடம்!!!

கனிந்த மனதோடு காதருகில் 
அம்மா அம்மா எனும் போது...
கனிந்துருகுது என் இதயம்!!!


முகம் காணா முகப் புத்தகத்தில் கிடைத்த..
முத்தானான சொத்தடா நீ!!!
மகனே உனை அணைத்து...
மகிழும் நாள் தான் எப்போ??


எங்கேயோ இருந்த எம்மை ...
எதிர் பாராமல் இணைத்த இறைவன்...
அந்த இன்ப நாளை இனிதே தருவான்!!
-சந்ரா குகதாஷ்-



Wednesday, November 2, 2016

நீ இல்லாத நாட்கள்

நீ இல்லாத நாட்கள்
வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!!
வெளிச்சமற்ற விண்மீன்களின்
ஊர்வலமாய் எந்தன் வானம்..!!!


நீ இல்லாத நாட்கள்
உறங்காத கண்களாய் என் இரவுகள்
முடியாத கதைகளாய் 
எந்தன் கனவுகள்..!!!



நீ இல்லாத நாட்கள்
தந்தியறுந்த வீணையாய் என் நகர்வுகள்..!!!
பொருளற்ற பக்கங்களாய்
எந்தன் உறவுகள்..!!!



நீ இல்லாத நாட்கள்...
பூக்காத செடியாய் என் கவிதை..!!!
பதிக்காத தடங்களாய் 
எந்தன் பாதை..!!!


நீ இல்லாத நாட்கள்...
எழுதாத எழுத்துக்களாய் என் பேனா..!!!
மூடிய பக்கங்களாய் 
எந்தன் புத்தகங்கள்..!!!



சகியே..!!!
நான் இல்லாத உன்னையும்
நீ இல்லாத என்னையும்
நாம் என்று சேர்வதை
கண்டேன் நீ இல்லாத நாட்களில்..!!!
-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...