காதல் மையல் கொண்டு
மேகத்துள் ஒளிந்த நிலவாய்- எனக்குள் நீ
மறைய நான் மயங்கித்தான் போனேன்
உன் மடியழகில்..!!!
விரலோடு விரல் கோர்த்த கணம்
உயிரோடு உயிர் சேர்த்து கட்டிவைத்தது
காதல்..!!!
மாரோடு நீ சாய மறுகணமே
நான் தாயாக மாற
தாலட்டும் கூட தானாய் பிறந்தது..!!!
உச்சிமுதல் பாதல் வரை
எத்தனை மச்சங்கள் விரல்கள் தேடலில்
குதிக்க- கண்களும் கூடவே
கணக்கெடுப்புக்களில்
தவறவில்லை..!!!
நீ அழகி
என்பதை நானறிவேன்
பேரழகியும் நீயே தான்
வெட்கத்தில் இன்றறிந்தேன்..!!!
காற்று பட்டு திறக்கும் மொட்டாய்
என் இதழ் பட்டு திறந்ததடி
உன் மீன்விழிகள்…!!!
கவிதைகள் இடம் மாறியது
நம் இதழ்கள் வழியில்
முடிவதாயுமில்லை
உன்னிதழ் பக்கங்களில்
எழுதுகின்ற என் இளமை கவிதைகள்..!!!
நெருப்பிலும் நீர்துளி சிரிக்குமா..???
உணர்ந்தேன் உன் தேக சூட்டில்
என் வியர்வை துளிகள் முத்தாக…!!!
“போதுமடா மச்சம் பார்த்தது
மிச்சமாய் ஏதேனும் வைத்துவிடு” என்ற உன்
இமை துடிப்பில் நான் ஒடுங்கிபோனேன்..!!!
அடுத்த கணமே
விழித்துபார்கிறேன் அது ஒரு கனவு..!!!
எழுதுகின்ற என் இளமை கவிதைகள்..!!!
நெருப்பிலும் நீர்துளி சிரிக்குமா..???
உணர்ந்தேன் உன் தேக சூட்டில்
என் வியர்வை துளிகள் முத்தாக…!!!
“போதுமடா மச்சம் பார்த்தது
மிச்சமாய் ஏதேனும் வைத்துவிடு” என்ற உன்
இமை துடிப்பில் நான் ஒடுங்கிபோனேன்..!!!
அடுத்த கணமே
விழித்துபார்கிறேன் அது ஒரு கனவு..!!!
சில்லென்ற காற்று போர்வையின்
இடைவெளிகளில் சில்மிசம் செய்ய
இழுத்து மூடிய போர்வைக்குள்
உறங்கிப்போனேன்
மிச்சமாய் இருந்த
மச்ச கனவுக்காய்…!!!
இடைவெளிகளில் சில்மிசம் செய்ய
இழுத்து மூடிய போர்வைக்குள்
உறங்கிப்போனேன்
மிச்சமாய் இருந்த
மச்ச கனவுக்காய்…!!!
-பிசாசு-
No comments:
Post a Comment