முறிந்த காதல்
முறிந்தது காதல்
ஒளிச்சு ஒளிச்சு பேச்சுமில்லை
தனிமை சிறையுமில்லை
கொண்டாட்டம் நண்பர்கள் பட்டாளமுடன்
கும்மாளம் குடும்பத்துடன்.....
முறிந்த காதல்
முறிந்தது காதல்
தூக்கம் தொலைக்கா இரவுமில்லை
உனக்கான காத்திருப்புமில்லை
தலையணை நனையும் தேவையுமில்லை
போர்வைக்குள் தொலைபேசிக்கும் வேலையுமில்லை......
முறிந்த காதல்
முறிந்தது காதல்
கண்ணுக்குள் நீ ,
இதயத்தில் உன் உருவம்
பசி மறந்தேன் என்ற
பொய்யான வார்த்தையில்லை
வட்ஸ் அப்பில் வேலையில்லை
முகநூலில் கவிதையில்லை
வீணடிக்க நேரமில்லை
வீணான செலவுமில்லை.....
முறிந்த காதல்
முறிந்தது காதல்
எனையும் நேசிப்பேன்
மழலைகளையும் கொஞ்சுவேன்
கிழவனுக்கும் காதல் சொல்வேன்
குறுகுறுப்பும் படபடப்பும் எனக்கில்லை ...
சுவாசிக்கிறேன் முறிந்த காதல் என்று
நிம்மதியாகிறேன் முறிந்தது காதல் என்று.....
முறிந்த காதல்
முறிந்தது காதல்
-சிறிமதி-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Friday, November 4, 2016
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment