Monday, November 7, 2016

ஒரு நாளில் சந்திப்போம்

கோவில் படியேறவில்லை
தவம் ஏதும் கொள்ளவில்லை
அக்கினியிலும் கால் பதிக்கவில்லை
அலகு குத்தி நேத்தி செய்யவில்லை
உனை காணவேண்டி கடவுளிடம்
கை கூப்பிடவுமில்லை- இவையேதும் செய்யாது
எதிர்பாராமல் கிடைத்தவள் நீதானடி
மாறிவந்த கோலமில்லை
எனை தேடிவந்த வரமேதான் நீ..!!!

பேசிடத்தான் வார்த்தைகள்
தேடினோம்
வாழ்ந்திடத்தான் புது காதலையும்
நாடினோம்- காணாத போது
கைப்பேசி வழியே நிமிடங்கள்
முழுதும் கலந்தோம்..!!!
குரல் கேட்காத பொழுதெல்லாம்
குறுஞ்செய்தி வழியே
குறைவின்றி மொழிந்தோம்..!!!

நித்தமும் சத்தங்களோடு
முத்தங்களும் பொழிந்தோம்..!!!
நீயும் நானும் நாமாகவே
நமக்குள் காதலாகவே
தாம்பத்தியம்
வளர்த்தோம்..!!!

புகைப்படங்கள்
இடம்மாறியது நம் இதழ் பழங்கள்
இன்னும் சுவை கூடியது..!!!

கற்பனையில் நீ என்னோடு வாழ்கிறாய்
கவிதையில் நான் உன்னோடு கரைகிறேன்
நாம் சந்திக்கும் நாட்கள்
வெகுதொலைவில் இல்லை


வெட்கங்களை கொஞ்சம்
ஒத்திகை செய்துகொள் பெண்ணே..!!!
நம்மை கண்டு காதலும்
ரசித்து வெட்கம் கொள்ள வேண்டும் ..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...