Thursday, November 3, 2016

நீ -நான்-நாம்- சிறு பிரிவு

விடியும் பொழுதும் உன்னோடு
முடியும் மாலையும் உன் நினைவோடு
தொட்டுச்செல்லும் காற்றும் 
உன் பரிசத்தோடு
பட்டுத்தெறிக்கும் நீர் குமிழும்
உன் அழகோடுதான் என -என் நிமிடங்கள்
கடந்துபோகின்றதடி சகியே..!!!


சின்ன சின்ன சண்டைகள் கூட
சுகங்களாக நமக்குள் ஆறுதலுக்கு
அன்னையாக நீ மட்டும்தான்
இன்று எனக்குள்..!!!

ஒவ்வொரு வைகறை பொழுதையும் நான்
வாரியனைத்து புது நாட்களாய் மாற்றியது
நீ என்னோடு இருக்கும் 
நாளிகைகளுக்காகத்தான்..!!!
நான் பசியாற மறக்கும் போதெல்லாம்
நீயேதான் வந்தாய் நிலா சோறாக…!!!
பசியாறி கிடந்தேன் உன் காலடியில்தான்
காதல் ருசிகூட உணர்ந்தேன்
உன் இதழ்களில்தான்..!!!



என்னுயிரே..!!!
என்னோடு நீயிருந்து 
உன்னோடு எனை கட்டிவைத்து
அழகுபார்தவளும் நீதான்..!!!

என்னை மனிதனாக மாற்றி 
மகிழ்ச்சி தந்தவளும்
நீ மட்டுமேதான்..!!!


இரவோடு நிலவாக
வானோடு நீலமாக
என்னோடு நீயிருந்த நேரமெல்லாம்
இனிக்குதடி- பத்துநாளாய் உனை
பார்க்காது எப்படியிருப்பேன் என்று
உள்ளே பைத்தியமும் 
பிடிக்குதடி…!!!!


உறவுகளை தேடி நீ போக போகின்றாய்
என் உறவான உன்னை விட்டு நான்
எப்படியடி உயிர் வாழப்போகிறேன்..????

நீயில்லாத பொழுதுகளில்…

தனிமையில் உனை களவாடிட போகிறேன்
நிமிடங்களில் உன் புன்னைகையை
சிறைவைக்கப்போகிறேன்..!!!
இரவுகளில் உன் மடியில் 
தலையசைக்கபோகிறேன்
கனவுகளில் உன்னோடு 
கதைபேச போகிறேன்..!!!


தீயின் மேல் அமர்ந்து உன் 
வருகைக்காய்
தவம் கிடக்கபோகிறேன்..!!!
காலங்கள் மறந்து கவிதையில் 
உன்னோடு
கட்டியனைத்து கிடக்கப்போகிறேன்..!!!


நீ நானாய் திரும்பி வரும் வரை
நான் நீயாய் உருமாறி உன்
உயிரில் கலந்து உயிர்வாழப்போகிறேன்
என்னுயிரே…!!!!
-பிசாசு-



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...