Thursday, November 3, 2016

எதிர் பாராத சந்திப்பு!!!

தமிழ் அன்னையவள்
தந்த பொக்கிஷமே!!!
தேன் சிந்தும் தமிழால் 
எனைத் தீண்டியவனே!!!
நான் செய்த புண்ணியத்தால் 
நட்பெனக்களித்த..
நன்கொடை நீயடா!!


பத்துமாதம் சுமக்கவில்லை...
பத்தியமும் காக்கவில்லை!!!
மார்மீதும் அணைக்காத உன்னை..
மகனாக சுமக்கின்றேன் என் இயத்தில்!!!


கவியால் எனைத்்தீண்டி..
கருத்துக் கேட்டு களவு
கொண்டனையோ எனை??
மகனே உன் முகம் காணாமலேயே 
களவு போனேன் உன்னிடம்!!!

கனிந்த மனதோடு காதருகில் 
அம்மா அம்மா எனும் போது...
கனிந்துருகுது என் இதயம்!!!


முகம் காணா முகப் புத்தகத்தில் கிடைத்த..
முத்தானான சொத்தடா நீ!!!
மகனே உனை அணைத்து...
மகிழும் நாள் தான் எப்போ??


எங்கேயோ இருந்த எம்மை ...
எதிர் பாராமல் இணைத்த இறைவன்...
அந்த இன்ப நாளை இனிதே தருவான்!!
-சந்ரா குகதாஷ்-



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...