Thursday, October 13, 2016

நீயா பேசியது..!!!

கண்ணோடு கண் வைத்து
கனவுகளில் எனை தைத்து
காதலை கூட்டியவளே
காதலை மடித்து உன் -கக்கத்தில்
வைத்துக்கொண்டு
காணாது தேடுவது ஏனோ…??

மடியோடு தலை சாய்ந்து
மனதோடு உறவாடி உயிரின் நிழலாய்
உடன் வந்தவளே- மறந்துவிடு என்று
மட்டும் சொல்லிவிட்டு
திசைமாறி நீ போவதேனோ..??ஃ


மொளனமாய் காதலிசைத்து
உருவமாய் என்னுள் சிலைசெய்து
உயிர் தந்து உணர்வூட்டிய
தேவதையே- சிலையுடைத்து மண்ணாக்கி
நீ மாயமானதேனோ..???


கவிதைகள் நானெழுத
காற்றாகி எனை நீ தீண்ட
கற்பனைகளிலும் பற்றியதடி
காதல் தீ- கண்ணீரை கடன் வாங்கி
காதலணைக்க நான் பித்தனாகினேன்..!!!


நிசப்த இரவில் நீயும் நானும்
நிலவின் ஒளியில் தேடிய தேடலின்
முடிவில் வார்த்தைகளே மரணித்து
மொளனங்களில் உடைந்தது நம் இடைவெளியின்
கண்ணாடி குவளைகள்- சிதறிய துகள்களில்
வந்து போகும் உன் விம்பங்களிடம்
கேட்கின்றேன் “நீயா பேசியது”
இனி என்னோடு பேசாதே என்று..!!!

-பிசாசு-




No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...