கனவுகளில் எனை தைத்து
காதலை கூட்டியவளே
காதலை மடித்து உன் -கக்கத்தில்
வைத்துக்கொண்டு
காணாது தேடுவது ஏனோ…??
மடியோடு தலை சாய்ந்து
மனதோடு உறவாடி உயிரின் நிழலாய்
உடன் வந்தவளே- மறந்துவிடு என்று
மட்டும் சொல்லிவிட்டு
திசைமாறி நீ போவதேனோ..??ஃ
மொளனமாய் காதலிசைத்து
உருவமாய் என்னுள் சிலைசெய்து
உயிர் தந்து உணர்வூட்டிய
தேவதையே- சிலையுடைத்து மண்ணாக்கி
நீ மாயமானதேனோ..???
கவிதைகள் நானெழுத
காற்றாகி எனை நீ தீண்ட
கற்பனைகளிலும் பற்றியதடி
காதல் தீ- கண்ணீரை கடன் வாங்கி
காதலணைக்க நான் பித்தனாகினேன்..!!!
நிசப்த இரவில் நீயும் நானும்
நிலவின் ஒளியில் தேடிய தேடலின்
முடிவில் வார்த்தைகளே மரணித்து
மொளனங்களில் உடைந்தது நம் இடைவெளியின்
கண்ணாடி குவளைகள்- சிதறிய துகள்களில்
வந்து போகும் உன் விம்பங்களிடம்
கேட்கின்றேன் “நீயா பேசியது”
இனி என்னோடு பேசாதே என்று..!!!
No comments:
Post a Comment