Saturday, October 8, 2016

உன்னோடு இருந்த ஒரு பொழுது

ஆழ்கடல் முத்துக்களாய்
மின்னிடும் உன் புன்னகையில்
எத்தனை யுகங்கள் தான் நான்
உயிர்த்திருந்தேன்..!!!

சில்லென்ற காற்றில்
கலந்துவந்த உன் குளிர்
வார்த்தையின்
துளிகளின் சாரல்களில்
எத்தனை கவிதைகள் தான்
நான் எழுதியிருந்தேன்..!!!


கட்டுண்டு கிடந்த என்
கைவிலங்குகளை ஒரு
நிமிடதொடுகையில்
உடைத்றெிந்த உன் ஸ்பரிசத்தில்
எத்தனை சொர்கங்களை
நான் கண்டிருப்பேன்..!!!

உள்ளங்கள் இணைந்த நம்மில்
உதடுகள் இணைகையில்
காதலும் மோட்சம் கண்டதை -உன்
கண்களில் நான் காணும்போது
எத்தனை ஜென்மங்கள்
நான் எடுத்திருப்பேன்..!!!


கொஞ்சம் வேகமாய்
கொஞ்சம் மேகமாய் தவழ்ந்து போன
வசு வண்டியின் இருக்கையில்
என் தோளில் நீ சாய்கையில்
எத்தனை கற்பனைகளை நான்
கடந்திருப்பேன்..!!!


ஒரு பொழுது உன்னோடு
நான் பயணிக்கையில்
என் முப்பொழுதும்
மறந்து புதுபொழிவு கண்ட
என் ஜீவனின்று
எத்தனை பொழுதுகளை கடந்தாலும்



“உன்னோடு இருந்த பொழுதுகளையே
சுவாசித்து உயிர்வாழ்ந்து கிடக்கின்றது”
மீண்டுமொரு ஒரு பொழுதுக்காய்..!!!

-பிசாசு-

1 comment:

  1. எந்த வரிகள் அழகு என்று சொல்ல , எல்லா வரிகளும் அர்த்தம் உள்ளது

    ReplyDelete

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...