Saturday, October 8, 2016

கோடி உறவுகள் வேண்டாம்

அழும் போது ஆறுதலாய்
விழும் போது தாங்குதலாய்
இருக்கும் உறவுகளுக்காய்
எப்பொழுதும் ஏங்குதலாய்
என்னிதயம் துடிக்கின்றது
கிடைக்காத அந்த
உறவுகளுக்காய்..!!!


பூவில் வாழும் வாசமாய்
காற்றில் கலந்த சுவாசமாய்
முப்பொழுதும் நேசமாய் பாசம்
காட்டும் உணர்வுகளுக்காய்
காத்திருந்தே
கடந்துபோகின்றது- என் நிமிடங்கள்
நிலையற்ற அந்த
உரிமைகளுக்காய்..!!!

பேசும் வார்த்தையில் 
அன்பில்லாத உறவுகளும்
வாழும் வாழ்க்கையில்
தொடராத உறவுகளும்..!!!
கூடி நின்று ஒப்பாரி வைத்து
ஓடி வந்து தூக்கிப்போக
நாலு உறவுகள் போதும்
கோடி உறவுகள் ஏன் வேண்டும்..???
வேசம் கொண்ட இந்த பூமியில்..!!!!
-பிசாசு-


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...