Tuesday, October 25, 2016

என்னை என்ன செய்தாய்

என் வழியில் நான் தனியாகி கிடந்தேன்
உன் வழி மறந்து நீ வந்த வழி 
என் வழியானதோ..???
காதல் வழி கொண்டு நீ
காயங்களின் 
வலியாற்றினாயே அன்பே..!!!!


தடை மறந்து நடை பயின்று
நான் உன் இடை வந்து சேர்ந்தேனடி
இடைவேளையின்றி 
இன்பங்கள் நாம் பகிர்வோம்
முடிந்த துன்பங்களை மறந்து..!!!


மேகமில்லா வானாய் அம்மனமாய்
நான் கிடந்த போது வானவில் கொண்டு
வர்ணங்கள் ஏழு செய்தவளே
என்ன தான் தவம் செய்தேன்- ஏழு ஜென்மமும்
என்னோடு நீ கைகோர்த்து வர..!!!!


எனை என்ன செய்தாய் அன்பே..!!!
கல்லாய் கிடந்த என்னை சிற்பமாக்கினாய்
சொல்லாய் பிரிந்த என்னை
கவியாக்கினாய்…!!!
விதையாய் விழுந்து என்னில் தளிராய்
தடைகள் உடைக்க வைத்தாய்..!!!
கடலாய் கடந்த என்னில் அலையாய்
கரை தொட வைத்ததாய்..!!!


கனவாய் மடிந்த என்னில்
தினம் இரவாய் 
தொடர்கின்றாய் அன்பே
புது விடியலில் பூத்திடும் பூவாய் நீ..!!!!

-பிசாசு-




No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...