மாற்றங்களை கேட்டுக் கேட்டு
நாங்கள் மடிந்தும் போகவில்லை
சுற்றங்களின் சுகவிசாரிப்புகள்
இங்குபோல் எங்கும் இல்லை
ஏற்ற இறக்கம் வந்த போதும்
விட்டுப்போனவர்கள் யாருமில்லை..!!
சீற்றங்கள் நாங்கள் கொண்டதில்லை
எம்மை சீண்டி தீண்டி பார்க்கின்ற
சீமை தொரையானாலும்
காதை திறுகாமல் விட்டதில்லை..!!
விட்டுக்கொடுப்பதிலும்
தோள் தட்டிக்கொடுப்பதிலும்
நாங்கள் வீரர்கள்..!!!
வந்தாரை வாழ வைத்து- எம்
வாழ்வில் கெட்டுப்போனவர்களும்
நாங்களே...!!!
அமர்ந்து ஆறுதல் பெற நாலடி
படுத்துறங்க ஆறடி- எம்மவர்
வாழ்வென்ன வெறும் பத்தடியிலா..???
எம் வாக்குகளை வாங்கிக்கொள்ள
உம் வார்த்தைகளை வீசியவர்களே
சொன்ன நாக்கையும்
வாக்கையும் காப்பாற்றிட
மறந்துபோனதேனோ..??
உண்பது உணவென்றால்
அதில் இட்டதும் உப்பென்றால்
சொரனையும் பிறக்கட்டும்
நீயும் மனிதன்தான் என்பது புரியட்டும்..!!!
கட்சி விட்டு கட்சி மாறி
கண்ட இடமெல்லாம் நாக்கை நீட்டி
நற்சுவை மறந்த
அரசியல் திருடன்களே..!!!
ஒரு வேளை உணவையாவது
உண்மையாக
உண்ண வேண்டுமென்று
நினைத்துவிடுங்கள்- நீங்கள்
செய்த பாவங்கள்
உம் வாரிசுகளுக்காவது
வட்டியாய் சேராதிருக்கட்டும்..!!!!
-பிசாசு-
No comments:
Post a Comment