Monday, October 17, 2016

விழிகளும் மொளனமாய்

உன் விழி அம்புகளால்
எனை தாக்கி கொஞ்சிடும் 
புன்னகையால் எனை வீழ்த்தி 
காதல் மது ஊட்டியவளே
கிறங்கடித்துக் கிடக்கின்றேனடி
நான் உன் விழி பேச்சில்..!!!

எட்ட நீ நடந்து போகையில்
ஒட்டி உன்னோடு வருகிறது 
என் மனது .....
நீ எட்டிப்பிடித்து 
வைத்துக்கொள்வதும்
உன் நெஞ்சோடு சேர்த்து 
தைத்துக்கொள்வதும்
உன் இஷ்டமடி..!!!

காதல் சொல்ல வார்த்தைகளை
கடன் வாங்கினேனடி அந்த கம்பனிடம்
கூடவே வட்டியாய் உன் அழகையும்
தந்து சென்றானடி அந்த பிரம்மனும்


என் காதலை சொன்னேனடி
கவிதையின் வடிவில்- உன் காதலை
எப்படி சொல்வாயடி தமிழ் மொழியில்..???


காதல் வழிகாட்டிய உன்னழகில்
என் ஜீவனின் உயிரை கண்டேனடி..
உன் வலைந்து நெழிந்த 
கூந்தலின் கருமையில் 
என் இரவுகளை தொலைத்தேனடி..!!!


பூக்காதிருக்கும் பூக்களுண்டு -உன்
கண்களில் கண்டேன் அதை இன்று..!!!
பேசிடும் உதடுகளும்
வார்த்தைகளை விழுங்கிவிட- எனை
தாக்கிய விழிகளும் மொளனமாய்
கடப்பதேனோ..???
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...