கொளுத்தும் வெயிலிலும்
கவிதைகளாய்
காதலை கட்டிக்கொண்டு
புறண்டுகிடக்கின்றது
என் நாட்குறிப்பேடுகள்..!!!
பசியின்றியும் தூக்கமின்றியும்
நினைவுகளாய் காதலை
ருசித்துக்கொண்டு
உயிர்பித்துக்கிடக்கின்றது
என் கனவுகள்..!!!
சிரிப்பின்றியும் களிப்பின்றியும்
மௌனமாய் தன் காதலை
தியானித்துக் கொண்டு
திரிகின்றது
என் உதடுகள்..!!!
உயிரின்றியும் உடலின்றியும்
காற்றாய் கலந்து அலைந்து
தன் காதலை
தேடிக்கொண்டிருக்கின்றது
என் உணர்வுகள்..!!!
அன்பே
ஏக்கத்திலும் தூக்கத்திலும்
உன் பக்கத்திலே வாழ்ந்துக்கொண்டு
இருக்கும் என் காதலுக்கு- ஒரு
முத்தத்திலேனும் உன் காதலை
ஒரு வார்த்தைச்சேர்த்து சொல்லிவிடு
இறந்தாலும் அந்நிமிடம்
சொர்க்கமாய் மாறிவிடும்..!!!!
-பிசாசு-
No comments:
Post a Comment