உன்னோடு சேர்ந்து- உன் அணைப்புகளும்
நம் காதலின் இணைப்புகளுக்கு
இட ஒதுக்கீடு செய்தது..!!!

சிறு உரசல்களும் -நீள்
விரிசல்களில் இடைவெளிகளை
நிரப்பியது..!!!
மாறாது மறவாதிருக்கும்
உன் நினைவுகளும் -இரவுகளோடு
ஒட்டிக்கொண்டு கனவுகளில் வந்து
குந்திக்கொண்டது..!!
குறையாதிருக்கும்
உன் பேரழகும் நூறழகாய்
உருமாறி ஓரழகாய் கவிதைகள்
கிறுக்கியது..!!
உனக்காய் ஏங்கியிக்கும்
என் மாரழகும் தேரழகாய்
புது பூவழகாய் வாசம் சேர்த்து
காத்திருக்கு மழலையாய் நீ சாய..!!!
எனக்கான விடியலாய் -உன்
புன்னகையும் புது வெளிச்சம் கூட்டி
என் மன(ண)வறைகளை
மின்னிட தவம் கொண்டது..!!
உன் கோபங்கள் கூட
கூட்டாயிணைந்து -என்
தாபங்களையெல்லாம் தீர்த்து
இதயத்தை வருடி
நிமிடங்களை இனித்திட வைத்தது..!!!
இதயத்தை வருடி காதல் ராகம்
இசைத்த காதலனே…!!!!
என்னிதழ் வருடி உடலோடி
உயிர் வரை சென்று
பிறப்பின் மோட்சத்தை
எப்போது தருவாய்..???
--பிசாசு-
No comments:
Post a Comment