Sunday, October 2, 2016

மாற்றம்

“தாரமாய் வருவேன்” என்றவள்
தூரமாய் போய்விட
பாரமாய் ஆனது என் காதல்..!!!
உயிரும் என்னைவிட்டு
வேகமாய் போனது.!!!


தேகமாய் சேர்த்தவள்
தாகமாய் இருந்த என்னில்
மேகமாய் பொழிந்து
காதல் தாகம் தீர்த்தாளே
சோகமாய் எனை தாக்கி
பாதை மாறி மாற்றிப்போனாளே..!!!


அவளை மறக்க நினைக்க
இதயத்தில் இடிமுழக்கமாய் எழ
உடலெல்லாம் மின்னல் தாக்கமாய் விழ
கண்களிலே கன மழை..!!!



அவளை நினைக்க நினைக்க
கற்பனைகள் கடலாய் பிறக்க
தனிமையெல்லாம்
இனிமையாக்க
வெள்ளை தாளிலே
“கவிதை மழை"
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...