அல்லும் பகலும் கண் விழித்து....
சிணுங்கும் குரல் கேட்கும் முன்னே...
முலையூட்டி உன் பசி தீர்த்தவள் !!!!
எடுத்தடி வைக்க தள்ளாடிய
உன்னை இன்று....
ஏணியாக இருந்து
புகழின் உச்சியை தொட வைத்தவள்!!!
தனியாக
தவிக்கின்றாள் உன் குரல் கேட்க ...
சீமையில்
சீமானாக இருக்கிறேன்!!!
சேர்ந்து வாழ்வோம் வா என்றாய்...
பாசமென பறந்து வந்தேன்!!!
பாசமல்ல,
மோசமென ஏங்குகிறாள்!!!
ஒரே வீட்டில் இருந்தும் ....
ஓடி ஓடி உழைக்கும்
மகனுக்கும் மனைவிக்கும்...
புரியா பாசையில் பேசும் ...
பேரக்குழந்தைகளை பார்கும்
ஆயாவானாள் அவ்வேழைத் தாய்!!!!
-லோசனி நாதன்-
No comments:
Post a Comment