Sunday, September 18, 2016

புது காதல் கதை

அடிக்கடி மௌனங்களின்
கணங்களைக்கொண்டு
உறைய வைக்கின்றாய்
என் இதயத்தை..!!!


மறுநொடியே
வெள்ளிப்புன்னகை வீசி
நிறைய வைக்கின்றாய்
அதே இதயத்தை..!!!


அடிக்கடி கோபங்களின்
கீற்றுக்களை வழியனுப்பி
உரசிப் புண்ணாக்குகின்றாய்
என்னுயிரை..!!!


சிறு இடைவெளியில்
ஓடி வந்து அரவனைத்து
உயிரையும் கூட
கரைய வைக்கின்றாய்..!!!


சிறு நாடகம்
அரங்கேற்றி வெறுமேடையாக்கினாய்
புது காதல் கதையெழுதி
பைத்தியமாக்கினாய்..!!


சகியே..!!!


பேச்சில்லை நீ
மெளனமாய் நின்ற போது
மூச்சில்லை நீ
பிரிந்து போகும் போது


இன்று
நானேயில்லை நீ
எனக்காய் இல்லாத போது..!!!
-பிசாசு-



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...