அன்பாக எனை அழைத்து
உன் ஆசை தீர காதல்
மொழி பேசி
வஞ்சமில்லா உன்
நெஞ்சமதில்
பஞ்சமில்லா காதலொன்றை
தந்தாயே -என்
செல்லமே..!!!
கோபங்கள் நான்
கொள்ளும்
போதெல்லாம் சிறு
புன்னகையிலே
சாந்தப்படுத்தி
துரோகிகளையும் கூட
நேசிக்க கற்றுக்கொடுத்தாயே
-என்
தங்கமே..!!!
தோல்விகளின் போதும்
கூட
ஆறுதல் தந்து வெற்றியின்
பக்கங்களில்
என் பெயரெழுதிட
முதலெழுத்திட்டு
தூரமாய் நின்று
பார்த்து ரசித்தாயே
என் சொந்தமே..!!!
இப்படியெல்லாம்
என்னோடு இருந்தவள் நீ
என்னை முழுவதுமாய்
உன்னிடம்
இழந்தவன் நான்..!!!
என்னுயிர் கூட
என் சொந்தமில்லாது
உன்னோடு வந்து
உறவாட
தினமும் மரணிக்கின்றேன்
நான்
என் கவிதையில்..!!!
மறுபடியும் புதிதாய்
பிறக்கின்றேன்
உன் மடியில்..!!!!
-பிசாசு-
No comments:
Post a Comment