Thursday, September 29, 2016

பிடிக்காத வரனும்....

ஜாதி மாறி காதலித்தால்
தரம்கெட்டு போய்விடும் என்று
அவசர அவசரமாய்- என் மனம்மாத்தி
கட்டிவைத்தனர்
மனம் ஏற்காத ஒரு பெண்ணை..!!!


திருமண புகைபடத் தொகுப்பில்
கூட புன்னகைக்கவில்லையென்று
ஒரு மாதம் கழித்து
ஒப்பாரி வைக்கின்றாள் அவள்…!!!

கண்கள் கூட அவளை பார்க்கவில்லை
இன்னமும் வார்த்தைகள் கூட
அவளை கொஞ்சியதில்லை என் சொந்தமென்று..!!!
மறந்து போகாமலும்
இறந்து போகாமலும் என் காதலி
என்னுள் உயிரோடிருக்க எப்படி நான்
இவளுக்கென்றோர் ஓர் உயிரைக் கொடுப்பேன்..???



தொட்டுவிட விரும்பவில்லை
அவள் கன்னத்தில்
முத்தங்களை வைத்துவிட முடியவில்லை
என் தேடல்களும் கூடல்களும்
அவளோடு போயிருக்க- இல்லாத ஒன்றை
இவளுக்கெப்படி பரிசளிப்பேன்..!!!!



இதயம் கனக்கிறது
இமைகள் துடிக்கிறது
இல்லாத காதலை இவளுக்கெப்படி 
கொடுப்பதென்று..???

பிடிக்காத வரன் ஒன்றை
பிடித்த என் காதலு(லி)க்காக
ஏற்றுக்கொண்டேன்
என் வாழ்வில் சேர்த்துக்கொண்டேன்..!!!



காலம் கடந்து போக….
என் வீட்டு கௌரவமும்
எங்கள் வீட்டு ஜாதியும் வென்றதாய் 
சொன்னார்கள்
அவர்களுக்கு மட்டுமல்ல
இவளுக்கும் கூட தெரியவில்லை
ஜெயித்தது காதலென்று- எனக்காய் வந்த
இவள் தந்த புது காதலென்று..!!!



பிடிக்காத வரனும்
பிடித்துப்போனது இவள் காட்டும்
புது அன்பில் இன்று..!!!!


பிரிந்தவள் பிரிந்ததாய்
இருக்கட்டும் இனி என்னோடு
இணைந்தவள் என்றும் பிரியாது
இருக்கட்டும்..!!!!
--பிசாசு--

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...