பகுத்தறிய முடியவில்லை
ஒவ்வொரு முறையும்
பாசத்தில் தோற்கும் போதும்.....
சூழ்நிலை கைதியாகி
எனை வெறுக்க ஒன்றுமில்லை
என்ற சொல்லில்
ஓர் இலட்சம் உண்மைகள் மறைய
பாசம் மட்டும் வேசமாக.....
என் மன புழுக்கம் ஆற்ற
வீசிய தென்றலும்
தோற்று இயலாமையுடன்
அசைவற்று போக
என் வேதனை போல் சுழன்றடித்து
கலைந்து போனது
வேசமான பாசமும்.......!!!
No comments:
Post a Comment