Sunday, September 18, 2016

வேசமான பாசமும்.......!!!

எனக்குள் பெரும் போராட்டம் 
பகுத்தறிய முடியவில்லை 
ஒவ்வொரு முறையும் 
பாசத்தில் தோற்கும் போதும்..... 

சூழ்நிலை கைதியாகி 
எனை வெறுக்க ஒன்றுமில்லை 
என்ற சொல்லில் 
ஓர் இலட்சம் உண்மைகள் மறைய 
பாசம் மட்டும் வேசமாக..... 

என் மன புழுக்கம் ஆற்ற 
வீசிய தென்றலும் 
தோற்று இயலாமையுடன் 
அசைவற்று போக 
என் வேதனை போல் சுழன்றடித்து 
கலைந்து போனது 
வேசமான பாசமும்.......!!!

- சிறிமதி-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...