Tuesday, September 13, 2016

எழுந்து வா தமிழா

வந்தாரை வாழவைத்தே
தன் வாழ்வையிழந்தானே தமிழன்..!!!

வீதியில் கிடந்தவரை
வீட்டுக்கழைத்து அவ்வீடையிழந்து
தெருவில் வீசப்பட்டானே தமிழன்..!!!

பசியில் மயங்கிக்கிடந்தவனை
எழசெய்து விருந்தளித்து
குடிக்க இன்று ஒரு சொட்டு தண்ணீர்
கூடயில்லாது தவிக்கின்றானே தமிழன்..!!

கலாச்சாரமே இல்லாது கிடந்த
கயவரெல்லாம் இன்று தமிழின் நிழலில்
இளைப்பாரி புது காவியம் எழுதிக்கொண்டு
தமிழில் கலப்படம் செய்கின்றனர்..!!!

தனகென்று அடையாளமில்லாது
வந்தவனெல்லாம் இன்று தமிழின்
அற்புதங்களை திருடி வாழ்கின்றான்
அவனாட்சி செய்து..!!!

மொழியை மாற்றினாய்
மௌனமானோம்..!!!
கலாச்சாரத்தை களவாடினாய்
பொருத்துக்கொண்டோம்..!!!
தெய்வங்களையும் கூட
விட்டு வைக்கவில்லை
உருவத்தில் மாற்றம் செய்து
வழிபட்டாய்
விட்டுக்கொடுத்தோம்..!!!
திரவியம் தேடி வந்த நீ
எம் தேசத்தை உன் தேசமாய் திரிபுபடித்தி
புதியதொரு வரலாறு படைத்தாய்
அதையும் வாசித்தோம்..!!!

அகிலத்தையே
அடக்கி ஆண்ட பரம்பரை
நாங்கள் தன்மானம் காக்க
உயிரையும்
துச்சென வாழ்பவர் நாங்கள்..!!!

அங்கும் இங்கும்
எங்குமென சிதறிக்கிடக்கும்
தீப்பொறிகள் தழிழர்கள்
ஒன்று சேர்ந்தால்
அகிலமே சாம்பலாய் போகும்..!!!

போதுமடா என் தமிழா
இனியும் வேண்டாம்
"வந்தாரை வாழ வைத்தது"


நாம் வாழ்வோம்- நமக்காக வாழ்வோம்
நம்மினம்
நம் மொழி
நம் சொத்து
இதை எவனுக்கும்
இனி தாரைவார்த்தலாகாது..!!!

தகர்தெறிவோம் தடைகளை
மீண்டும் ஆழ்வோம் அகிலத்தை

தமிழனை வீழ்த்த இனி எவனும்
நினைத்து முடிக்கும் முன்பே நாம்
அவன் தலைகொய்து
எம் தலைக்காப்போம்..!!!
தமிழைக்காப்போம்..!!!

எழுந்து வா தமிழா
தமிழ் மானம் காத்திட..!!! 
-தமிழன் விந்தும் ஒரு நாள் அதர்மத்தை மிஞ்சும்-






No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...