Monday, September 19, 2016

முதல் பிரசவம்..!!!

மீசை முளைக்காத வயதில்
காதலாசை முளைத்து- கல்லூரி சாலையெங்கும்
அவள் முகம் தேடி
ஒடிய சுகம் காதலின் முதல் பிரசவம்..!!!

வார்த்தைகளை கலைத்துப்போட்டு
எழுததெரியாமல் நான் கிறுக்கிய
ஒரு தலாட்டு காதல் பாட்டு
கவிதையின் முதல் பிரசவம்..!!!

தனியாகி பிறந்தவளின்று 
துணையாக வந்தவனோடு
மணவாழ்க்கைக் கொண்டு
பெண்ணிலிருந்து தாய்மையாக
பெண்மையின் முதல் பிரசவம்..!!!

துணையாக இருந்தவளோடு
உயிராக கலந்தவனின்று இரு ஜீவன்களோடு
உறவாடும் புது சந்தோஷம்
வாழ்ககையின் முதல் பிரசவம்..!!!


காரணமே இல்லாமல் அம்மாவை அழைத்து
காரணத்தோடு விம்மி விம்மி
அழும் குழந்தையின் தேடல்
வம்சத்தின் முதல் பிரசவம்..!!!

 -பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...