Monday, September 5, 2016

வலிகளின் வரிகள்

என்னால் உன்னை 
அழவைக்கவும் 
சிரிக்க வைக்கவும் 
மட்டும்தான் முடியும் 

ஆனால் 
உன்னால் 
என்னை சாகடிக்கவும் முடிகிறது 
பிரிவு என்னும் வார்த்தையால்..!!!
************************************

விலகி பார்க்கின்றேன் 
உன்னைவிட்டு விலக்கி பார்க்கின்றேன்
மறந்து பார்க்கின்றேன் 
உன் காதலை மறக்கவும் பார்க்கின்றேன்
பிரிந்து நிற்க்கின்றேன் 
உன்னை விட்டு பறந்துப்போகின்றேன் 
எல்லாம் உடலால் நடக்கிறது 
என்னுயிர் உன்னையே நினைக்கின்றது
உடலோடு வாழ் விரும்பவில்லை 
பெண்னே.. 
உயிரோடு சாகின்றேன்..!!!
******************************************

விலகிச்செல்லும் உன்னை விட்டு 
விலகி செல்லதான் நினைக்கிறேன்...
ஆனால் 
உன் நினைவலைகள் 
மீண்டும் உன்னிடமே கரை சேர்கிறது
கரை சேர்ந்த நான் மீண்டும் 
கடலுக்கும் இழுக்கப்படுகின்றேன்..!!
*****************************************

போதை தலைக்கேறியும்
உன் நினைவுகளை மட்டும் 
தாண்டிச்செல்ல முடியவில்லையடி
மெய் மறக்கச்செய்யும் 
போதையும் கூட பொய்யானது
உன் நினைவுகளுக்கு முன்னால்..!!!
*****************************************

மதங்களும் ஜாதிகளும்
சாட்டையடிக்கப்பட்டு 
சாக்கடையில் வீசியிருந்தால்
பல காதல் 
கண்ணீரில் கரைக்கப்பட்டும்
கல்லரையில் புதைக்கப்பட்டும்
இருந்திருக்காது..!!!
******************************************

வலிகளினால்
வருகின்ற
வரிகளுக்கு
வலிமை அதிகம் 

காதலால் கொண்ட
காயங்களுக்கு
வேதனை அதிகம்..!!
-பிசாசு-
****************************************


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...