இரவை எதிர்பார்த்ததுமில்லை
கனவுகளை தேடியதுமில்லை..!!!
கடலை நேசித்தது இல்லை
கரைகளைத் தொட்டதும் இல்லை..!!!
காதலுக்கு முன்..!!!
நிலவை பிடித்தமில்லை
ஒளியினில் விழுந்ததுமில்லை..!!!
பூக்களை நுகர்ந்ததில்லை
வாசத்தை சுவாசித்ததில்லை..!!!
காதலுக்கு முன்..!!!
கற்பனையை தூண்டியதுமில்லை
கவிதைகளை கிறுக்கியதுமில்லை
தனிமையில் சிரித்ததுமில்லை
வெறுமையாய் நின்றதுமில்லை
காதலுக்கு முன்..!!!
காதலை சுமந்ததுமில்லை
தெருவெங்கும் ஏதோ ஒன்யை
தேடித் திரிந்ததுமில்லை..!!!
கண்ணீரில் கரைந்ததுமில்லை
இப்படி பைத்தியமாய் அலைந்ததுமில்லை
பட்டினிக்கிடந்துமில்லை
காதலுக்கு முன்..!!!
காதலுக்கு முன் காதலையும் -நான்
காதலித்ததுமில்லை
இப்படி நான் நீயானதுமில்லை
நான் யாரென்று
உணர்ந்திடவுமில்லை
“காதலுக்கு முன்”
-பிசாசு-
No comments:
Post a Comment