Wednesday, September 14, 2016

நீ வந்த பின்பு

எந்த இசையும்
பிடிக்கவில்லை -உன் குரல்
கேட்டப் பின்பும்..!!!

எந்த சுவையும்
பிடிக்கவில்லை -உன் இதழ்
சுவைத்தப் பின்பும்..!!!

எந்த பெயரும்
பிடிக்கவில்லை -உன் பெயர்
உச்சரித்தப் பின்பும்..!!!

எந்த பெண்ணையும்
பிடிக்கவில்லை -உன் முகம்
பார்த்தப் பின்பும்..!!!

எந்த இரவுகளும்
பிடிக்கவில்லை - உன்னோடு
கனவுகளில் வாழ்ந்தப் பின்பு..!!!

காதலும் கூட பிடிக்கவில்லை
கைவிட்டு நீ போன பின்பும்..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...