Friday, September 2, 2016

நினைப்பைத் தொலைத்து
உன் நினைவை மறக்க- நான்
நினைக்கும் பொழுதெல்லாம்

மறக்க மறந்தும்
உன்னை மட்டுமே
நினைத்தே
தொலைக்கிறேன் நான்..!!

தொலைவாய் போய்
தொலைந்த என்னை 
தேடி எடுத்தும்
தொலைத்துப்போனவளே..!!

நினைவாய் இருந்து என்னை
நித்தமும் கொள்பவளே..!!

தொலைந்து போ என்று நீ
சொல்லிப்போன போதும்
செத்துப்போனதடி 
என் இதயம்..!!

இனியொரு
முறையேனும்
உன்னை மறந்து -என்னை நீ
நினைப்பாயென்றால்

தான் மரணித்ததையும் 
மறந்து துடிக்குமடி என் இதயம்
உனக்காக..!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...