என் நிமிடங்கள்
உணர்த்திடாத
உன் நினைவுகளோடு
உறவாடும் போது
உணர்த்துகின்றது
-காதல் கனவு-
*********************
கோடி ஆண்டுகள்
கடந்துவந்து-நீ விட்டுச்சென்ற
பிரிவெனும் தண்டவாளங்கள்
என்னோடு
ஜென்ம ஜென்மங்களாய்
ஜென்ம ஜென்மங்களாய்
நீண்டாலும் - என்
கல்லறையில் புற்கள்தான்
முளைத்தாலும்
முளைத்தாலும்
நான் காத்திருப்பதும்
உன்னையே
உன்னையே
சார்ந்திருப்பதும்
ஒரே காரணம்தானடி
நான் உன்னை காதலிக்கிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
**********************************
இமைகளை
திறந்து இதயம்
எட்டிப்பார்க்கின்றது
நீ எதிரில் என்னை கடக்கும் போது..!!
இதயத்தை
மூடி கண்கள்
ஒட்டுக்கேட்கின்றது
நீ தூரமாய் பேசிடும் போது..!!
இரவுகளை
கடந்து கனவுகள்
வந்துபோகின்றது
நீ என்னை பார்த்திடும்போது...!!
மொழிகளை
மறந்து கவிதைகளும்
கூட மௌனமாகின்றது
நீ என்னை
திட்டித்தீர்த்திடும் போது..!!
மரணத்தையும்
மிதித்து காதலும்
கர்வம் கொள்கின்றது
நீ என்னை உரசிடும்போது..!!
******************************
உனக்கும் சேர்த்தே
என்னை நான்
காதலிக்கின்றேன்..!!
உனக்கும் சேர்த்தே
கவிதைகள் நான்
எழுதுகின்றேன்..!!
உனக்கும் சேர்த்தே
கனவுகளை நான்
கடன் வாங்குகின்றேன்..!!
உனக்கும் சேர்த்தே
சுவாசத்தை
யாசிக்கின்றேன்..!!
உனக்கும் சேர்த்தே
கற்பனைகளை நான்
சேமிக்கின்றேன்..!!
உனக்கும் சேர்த்தே
கண்ணீரில் நான்
கரைகின்றேன்..!!
உனக்கும் சேர்த்தே
ஏழு ஜென்மங்களை
பெற்று வந்தேன்..!!
சகியே...
அந்த ஜென்மங்களில்
ஒன்றிலாவது நீ
எனக்கும் சேர்த்து
என்னை காதலிப்பாயா..???
என்னை சார்ந்தே வாழ்ந்திருப்பாயா..???
-பிசாசு-
******************************************
No comments:
Post a Comment