தொடங்குமிடமறியாமல்
முடிக்குமிடம்
ஏதும் புரியாமல் நான்
தடுமாறி தலைசொரியும்
நேரமெல்லாம்
தடம் மாறிடாது
கனகச்சிதமாய் ஆரம்பித்து
காதல் கவிதைகளுக்கு
பிள்ளையார் சுழிப்போட்டு
தலைக்கோதிவிடுகிறதடி
உன் கண்கள்..!!!
தனிமையில் நான்
உருகிய போது உயிராய்
உடன் வந்து
தாயாய் தலைக்கோதி
நீ தந்த அன்பின் ஆதாரம்கொண்டு
கவிதையாய் வாழ்ந்திடச்
செய்கின்றதடி
உன் காதல்..!!!
நீயும் நானும்
தனிமையின்
இடைவெளியின் பூட்டுடைத்து
புதுக்கவிதை
படித்த நிமிடங்களை
வள்ளுவனின் மூன்றாம்பாலில்
கொஞ்சம் தொட்டெடுத்து
காதலை தாண்டி மோகக்
கவிதைகள் கிறுக்கச்செய்கிறதடி
மூடாத உன் அழகு..!!!
வெறும்தாளாய் படப்படத்த
என்னில்
பலநூறு வண்ணம்கொண்டு
தீட்டியவளும் நீதான்..!!!
இன்று நான் மைத்தொட்டு
உயிர்கொண்டு
எழுதிடும்
“என்
கவிதைகளும் நீதான்”
-பிசாசு-
No comments:
Post a Comment