Wednesday, October 26, 2016

காதலா காயமா..!!!

என் இதயத்தின் நரம்புகளை அறுத்து -உன்
காதலிசைக்கு வீணை அமைத்தவள் நீ
மௌனங்களின் விதைகளை தூவி 

என் மொழிகளை காயப்படுத்தியவளும் நீ.!!!


உலகையும் மறந்து 
உணர்வுகளையும் துறந்து
உயிரற்றுகிடந்த என்னில் காதலுயிர்
தந்தவளும் நீ மட்டும்தான்..!!!


இதுதான் காதலா..????


நான்தான் தனியாகி கிடந்தேன் நீயேதான் 
துணையாகி வந்தாய்- காய்ந்த நிலமதில்
காதல் துளி சிந்தினாய்..!!!


வசந்தமில்லை வாழ்ககையில் 
வண்ணம் தந்தாய்
சொந்தமில்ல உறவுகளில் நீ 
புது பந்தம் தந்தாய்
சொர்கத்தின் சாயலை காதல் 
சொற்களில் தந்தாய்
நரகத்தின் வேதனைகளையும் 
மறக்க வைத்தாய்
நீ தந்ததுதான் உலகின் காதலா..???


இன்று நீ
மொளனம் கரைந்து
வார்த்தை திரவங்களில்
என் நெஞ்சமதில் தீட்டியதான் காயமா..???
காதல் தந்த நீயே காயமும் தருவதா..???

சகியே..!!!
பூக்களும் முற்களாகுமா.???
மேகமும் தீயை பொழியும்..???
காற்றும் காயம் கூட்டுமா..???
தேவதைகளும் பொய்யாய் போகுமா…???
உண்மை காதலும்
காயமாகுமா..?????

--பிசாசு-

Tuesday, October 25, 2016

என்னை என்ன செய்தாய்

என் வழியில் நான் தனியாகி கிடந்தேன்
உன் வழி மறந்து நீ வந்த வழி 
என் வழியானதோ..???
காதல் வழி கொண்டு நீ
காயங்களின் 
வலியாற்றினாயே அன்பே..!!!!


தடை மறந்து நடை பயின்று
நான் உன் இடை வந்து சேர்ந்தேனடி
இடைவேளையின்றி 
இன்பங்கள் நாம் பகிர்வோம்
முடிந்த துன்பங்களை மறந்து..!!!


மேகமில்லா வானாய் அம்மனமாய்
நான் கிடந்த போது வானவில் கொண்டு
வர்ணங்கள் ஏழு செய்தவளே
என்ன தான் தவம் செய்தேன்- ஏழு ஜென்மமும்
என்னோடு நீ கைகோர்த்து வர..!!!!


எனை என்ன செய்தாய் அன்பே..!!!
கல்லாய் கிடந்த என்னை சிற்பமாக்கினாய்
சொல்லாய் பிரிந்த என்னை
கவியாக்கினாய்…!!!
விதையாய் விழுந்து என்னில் தளிராய்
தடைகள் உடைக்க வைத்தாய்..!!!
கடலாய் கடந்த என்னில் அலையாய்
கரை தொட வைத்ததாய்..!!!


கனவாய் மடிந்த என்னில்
தினம் இரவாய் 
தொடர்கின்றாய் அன்பே
புது விடியலில் பூத்திடும் பூவாய் நீ..!!!!

-பிசாசு-




Friday, October 21, 2016

சகியே..!!!

இறுகிபோய் கிடந்த இதயம்
இடைவிடாது துடிப்பது உனக்காகவே..!!
முடமாகி கிடந்த கால்கள் கூட
துள்ளி எழுந்து ஒடுவதும் உனக்காகவே…!!!
சுவாசிக்க மறந்த என் ஜீவன்
யாசித்து யோசித்துக்கிடப்பதும் உனக்காக..!!!

கண்களிலும் மஞ்சம் அமைத்து
நீ கொஞ்சிவிளையாட பார்வைகள்
பார்த்திருப்பதும்
உனக்காக..!!!


நெஞ்சத்தில் வஞ்சமில்லா
காதலொன்றை
பொத்தி பொத்தி வளர்ப்பதும்
உனக்காக..!!!



இரவுகளை தொலைத்து
கனவுகளை கடன் வாங்கி
கவிதைகளில் வட்டி கொடுப்பதும்
உனக்காக..!!!!


காலை நேர நிலவாய்
மாலை நேர வெயிலாய்
கண் சிமிட்டி காத்திருக்கின்றேன்
உனக்காக..!!!


பாலுக்காய் அழும் குழந்தையாய்
உன் காதலை வேண்டி அழுதுபுறண்டு
கிடப்பதும் உனக்காகவே..!!!


என் கக்கத்தில் ஓர் அனைப்பும்
உனக்காகத்தான்
நெற்றிபொட்டில் பதித்திடும் முத்தமும்
உனக்காகத்தான்..!!!


உள்ளங்கை இணைப்பில் உஷ்ணமும்
உனக்காகத்தான்
காதோர தென்றலின் ஈரமும்
உனக்காகத்தான்..!!!


என் இளமையின்
இன்பங்கள் உனக்காக..!!!
முதுமையின் பாசங்கள் உனக்காக
தாயன்பின் நகழ்கள் உனக்காக
மழலைகளின் சத்தங்கள் கூட
உனக்காக மட்டுமே…!!!


சகியே..!!!
ஓர் ஜென்மம் நான் வாங்கி
வந்ததென்னவோ எனக்காகத்தான்
என் ஜென்மத்தின்
மோட்சம் என்றுமே நீயாகத்தான்..!!!


என் எதிர்காலம்
எல்லையில்லா கிரகமாய்
உனக்காகத்தான்..!!!
-பிசாசு-

Thursday, October 20, 2016

மழலை சிரிப்பு

மயக்கும் ரீங்கார பொன்வண்டு போல்
மழலை சிரிக்க -மனதில் சுரக்கும்
அமுதாய் தேன் சொட்டு..!!!


கவலைகளை எல்லாம் 
நொடிப்பொழுதில்
மறந்திடச் செய்யும் மந்திரம்
உயிர் கொடுத்தவள் சோர்ந்திருக்க
புன்னகைக்க வைத்திடும் தந்திரம்..!!!


அழகு முகத்தின் அடையாள சின்னம்
மழலை சிரிப்பு- இடம் பொருள் பாராது
அனைத்திட தோன்றும் தினம் தினம்..!!!

உலகத்து மொழிகளெல்லாம்
மொளனமாய் மொழிபெயர்க்க
மழலை மொழி போதுமே
புது புது பாஷைகளும் வழி பிறக்க..!!!


காணத கடவுளை காண
கண்கோடி தேவையில்லை
கண்டுவிட்டால் போதும் 
மழலையின் சிரிப்பை
அந்த சொர்கமே கைவந்து சேரும்..!!!!
-பிசாசு-

காதல்..!!!

காதல் ஒரு
கைக்குழந்தை
வா என்று கை நீட்ட
ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்..! 

நினைக்கும் போது வலியாகவும்
மறக்கும் போது நினைவை கூட்டும்
வழியாகவும் தொடர்கின்ற பயணம்..!!!

இளமையின் உயிர்பின்
இதயத்தின் தீண்டல்
உயிரின் வார்ப்பில்
ஜென்மத்தின் தேடல்..!!!

கனவுகளின் பிரசவம்
கவிதைகளின் வசம் காதல்...!!!

கண்கள் வளர்க்கும்
அருசுவை அமிர்தம்
இதழ்கள் சுவைக்கும்
கசப்பு தீணி..!!!

அவள் எழுதும் எழுத்து
இவன் வாசிக்கும் வரிகள்..!!!

ஊசி முனையின் அழுத்தம்
வெண்பஞ்சின் வருடல்..!!!

காதல்..!!!
ஓற்றை  இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
வாழும் உயிருக்குள்
உயிர் தேடுவது..!!!
-பிசாசு-

Wednesday, October 19, 2016

என் தேவதைக்கு

நான் கண்ட சோகங்களை
எல்லாம் நீ கொண்ட காதலில்
சுமந்தவளே என்னவளே..!!!

எத்தனை ரணங்கள் 
எத்தனை ஏமாற்றங்கள் 
அத்தனையும்  மறந்து நான் 
புன்னகைத்திருப்பது
உன்னாலே..!!!

பாரமாய் நான் இருக்க 
உன் விழியோரமாய் எனை சுமந்து
கண்ணீரை துடைத்தவளே..!!!

சிலையான என்னை 
சிரிக்க வைத்தவளே
என் உத்தமியே..!!!

உடல் கொண்ட காதல் எல்லாம்
மண்ணாகி போயிருக்க
மனம் தந்த உன் காதல் மணக்குதடி
என் வாழ்வில்..!!!

சின்ன சின்ன சண்டைகள்
சிங்கார சில்மிசங்கள்
மிச்சமே வைக்க முடியாத 
உன்  அழகை பருகி 
அன்பில் உருகி எழுதி திளைக்கின்றேன் 
இங்கு ஒரு கிறுக்கள்..!!!


காதலியாய் வந்து 
என் ஓர்  அன்னையாகி 
மரணத்தை  கொன்று  நீ
ஜனனத்தை கொடுத்த
என் தாயுமானவளே..!!

மறு பிறப்பிலும்  நான்
வேதனையில் பிறந்திட
நீயே  வந்துவிடு காதலாய்
காயங்கள் ஆற்றி ஆறுதலாய்..!!!
-பிசாசு-
 

வேசம்..!!

என் தேரழகே உன் வருகைக்காய்
காத்திருந்து உன் காலடி தளத்தில்தான்
சிதருண்டு போகின்றது மனமது..!!

காற்றிலே கலந்த உன்வாசம்
சுவாசம் வரை சென்று சட்றென்று
திரும்பிட திக்ககுமுக்காடி
மூச்சிறைத்துப்போகின்றது
என் காதல்..!!!

வந்தவரெல்லாம் வந்த வழி திரும்பிவிட
அந்த வழி பார்த்தே என் விழிகள்
கண்ணீரில் கவியெழுத- புது வரி கொண்டு
சகியே நீயெழுதிய புதுக்காவியம் இன்று
செல்லரித்து கிடப்பதேனோ..???


தியாகங்களை நீ கொண்டாய் எனக்காய்
மோகங்களையும் களைத்து
நீள் வானம் நான் கொண்டேன் உனக்கயா
தேகம் இரண்டும் சேரும் வேளை 
தூரம் போனதேனோ???

அன்பே
காதல் இன்று மாயமாகி மறைவதுமேனோ..???

உடல் கொண்ட வேசம் எல்லாம்
என்றோ மேடையேறி தோற்றுப்போனதடி
உன்மீது கொண்ட காதலில் மட்டும்
உள்ளம் போட்டதில்லையடி காதல் வேசம்..!!!


என் அகம் கிழித்து உன்னில் தடம் பதித்தேன்
உன் தடையுடைத்து என்னில்
எப்போது நீ கலந்திடுவாய்.???


என் காதல் தீவிரமே
நீ போட்ட வேசங்கள் களையட்டுமடி
நேசமோடு வந்துவிடு
என்னில் இருக்கும் உன் மஞ்சத்தில் நீயே
தங்கிவிடு..!!!!
-பிசாசு-





Monday, October 17, 2016

அரசியல் திருடன்களே..!!!

மலையகம் மாய்ந்துவிட வில்லை
மாற்றங்களை கேட்டுக் கேட்டு
நாங்கள் மடிந்தும் போகவில்லை

சுற்றங்களின் சுகவிசாரிப்புகள்
இங்குபோல் எங்கும் இல்லை
ஏற்ற இறக்கம் வந்த போதும்
விட்டுப்போனவர்கள் யாருமில்லை..!!


சீற்றங்கள் நாங்கள் கொண்டதில்லை
எம்மை சீண்டி தீண்டி பார்க்கின்ற
சீமை தொரையானாலும்
காதை திறுகாமல் விட்டதில்லை..!!

விட்டுக்கொடுப்பதிலும்
தோள் தட்டிக்கொடுப்பதிலும்
நாங்கள் வீரர்கள்..!!!
வந்தாரை வாழ வைத்து- எம்
வாழ்வில் கெட்டுப்போனவர்களும்
நாங்களே...!!!

அமர்ந்து ஆறுதல் பெற நாலடி
படுத்துறங்க ஆறடி- எம்மவர்
வாழ்வென்ன வெறும் பத்தடியிலா..???

எம் வாக்குகளை வாங்கிக்கொள்ள
உம் வார்த்தைகளை வீசியவர்களே
சொன்ன நாக்கையும்
வாக்கையும் காப்பாற்றிட
மறந்துபோனதேனோ..??

உண்பது உணவென்றால்
அதில் இட்டதும் உப்பென்றால்
சொரனையும் பிறக்கட்டும்
நீயும் மனிதன்தான் என்பது புரியட்டும்..!!!

கட்சி விட்டு கட்சி மாறி
கண்ட இடமெல்லாம் நாக்கை நீட்டி
நற்சுவை மறந்த
அரசியல் திருடன்களே..!!!

ஒரு வேளை உணவையாவது
உண்மையாக
உண்ண வேண்டுமென்று
நினைத்துவிடுங்கள்- நீங்கள்
செய்த பாவங்கள்
உம் வாரிசுகளுக்காவது
வட்டியாய் சேராதிருக்கட்டும்..!!!!
-பிசாசு-

விழிகளும் மொளனமாய்

உன் விழி அம்புகளால்
எனை தாக்கி கொஞ்சிடும் 
புன்னகையால் எனை வீழ்த்தி 
காதல் மது ஊட்டியவளே
கிறங்கடித்துக் கிடக்கின்றேனடி
நான் உன் விழி பேச்சில்..!!!

எட்ட நீ நடந்து போகையில்
ஒட்டி உன்னோடு வருகிறது 
என் மனது .....
நீ எட்டிப்பிடித்து 
வைத்துக்கொள்வதும்
உன் நெஞ்சோடு சேர்த்து 
தைத்துக்கொள்வதும்
உன் இஷ்டமடி..!!!

காதல் சொல்ல வார்த்தைகளை
கடன் வாங்கினேனடி அந்த கம்பனிடம்
கூடவே வட்டியாய் உன் அழகையும்
தந்து சென்றானடி அந்த பிரம்மனும்


என் காதலை சொன்னேனடி
கவிதையின் வடிவில்- உன் காதலை
எப்படி சொல்வாயடி தமிழ் மொழியில்..???


காதல் வழிகாட்டிய உன்னழகில்
என் ஜீவனின் உயிரை கண்டேனடி..
உன் வலைந்து நெழிந்த 
கூந்தலின் கருமையில் 
என் இரவுகளை தொலைத்தேனடி..!!!


பூக்காதிருக்கும் பூக்களுண்டு -உன்
கண்களில் கண்டேன் அதை இன்று..!!!
பேசிடும் உதடுகளும்
வார்த்தைகளை விழுங்கிவிட- எனை
தாக்கிய விழிகளும் மொளனமாய்
கடப்பதேனோ..???
-பிசாசு-

Friday, October 14, 2016

நினைவால் தீ அணைப்பேன்..!!!

நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் உன் நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை எனக்கு..!!!

நீ யாரென்று தெரியாமல் தொடங்கிய
என் காதல் கதையில
நீதான் கருவானாய்.- என் உயிரின்
கதாபாத்திரமானாய்..!!!

என் வாழ்க்கை புத்தகத்திற்கு
முகவுரை எழுதுவதற்காக - நான்
என் இதய பக்கங்களை திறந்து 
வைத்தேனடி சகி
நீ எழுத வைத்தாய் ஓர் அழகான
கவிதை புத்தகத்தை..!!!


பக்கமாய் நீ இருக்கும் போது
உன் கக்கத்தில் நான் இருப்பேன்
கொஞ்சம் தூரமாய் நீயிருக்கையில்
உனை காற்றாய் நான் தொடுவேன்

பார்க்கின்றபோது காதலால் 
நான் இழைத்தேன்
பார்க்காது தவிகின்றபோது கவிதையால்
உனை ரசித்தேன்..!!!


வெட்கமாய் நீ விழி மூடுகையில்
வெப்பமாய் உனை தீண்டினேன்..!!
தெப்பமாய் நான் நனைந்து
நினைவால் தீ அணைப்பேன்..!!!



இதற்கு மேலும் என்னடி சொல்ல
எனக்காக உன்னை நீ கொடுத்துவிடு
என்னையே உனக்காய் எழுதிக்
கொடுத்த பிறகு….!!!
-பிசாசு-


நம் காதல்

என்னிலே நீ என் எண்ணம் எல்லாம் நீ
உன்னிலா நான் உன் உள்ளம் எல்லாம் நான்
கண்ணிலே நீ என் கண்ணீரிலும் நீ
வெண்ணிலா நீ என் வானத்து 

கன்(னி)நிலா நீ


உன்னிலும் நான் 
என் உணர்விலும் நீ
உன் உலகம் நான் என் அழகும் நீ
பிரமன் செய்த பெண்ணழகும் நீ..!!!


கற்பனையில் நான் கவிதையில் நீ
கனவினில் நான் காத(லி)ல் நீ


தீயானது குளிர்கின்றது
பனியானது சுடுகின்றது
உயினரானது உறவே 
உன்னோடு வருகின்றது
என்னுடலானது நிலழாக 
இங்கு கிடக்கின்றது
நீ வந்து உரு தருவாய் என்று..!!!



நான் என்றும் நீ நீ என்றும் நான்
நாம் என்பது இன்றுள்ளது
நம்மை சேர்த்துவைக்கும்
காதல் என்றும் உயிரானது..!!!
-பிசாசு



Thursday, October 13, 2016

மோட்சத்தை எப்போது தருவாய்..???

உயிரே…!!!
உன்னோடு சேர்ந்து- உன் அணைப்புகளும்
நம் காதலின் இணைப்புகளுக்கு
இட ஒதுக்கீடு செய்தது..!!!

விரல்கள் தொட்ட
சிறு உரசல்களும் -நீள்
விரிசல்களில் இடைவெளிகளை
நிரப்பியது..!!!


மாறாது மறவாதிருக்கும்
உன் நினைவுகளும் -இரவுகளோடு
ஒட்டிக்கொண்டு கனவுகளில் வந்து
குந்திக்கொண்டது..!!


குறையாதிருக்கும்
உன் பேரழகும் நூறழகாய்
உருமாறி ஓரழகாய் கவிதைகள்
கிறுக்கியது..!!

உனக்காய் ஏங்கியிக்கும்
என் மாரழகும் தேரழகாய்
புது பூவழகாய் வாசம் சேர்த்து
காத்திருக்கு மழலையாய் நீ சாய..!!!


எனக்கான விடியலாய் -உன்
புன்னகையும் புது வெளிச்சம் கூட்டி
என் மன(ண)வறைகளை
மின்னிட தவம் கொண்டது..!!


உன் கோபங்கள் கூட
கூட்டாயிணைந்து -என்
தாபங்களையெல்லாம் தீர்த்து
இதயத்தை வருடி
நிமிடங்களை இனித்திட வைத்தது..!!!

இதயத்தை வருடி காதல் ராகம்
இசைத்த காதலனே…!!!!
என்னிதழ் வருடி உடலோடி
உயிர் வரை சென்று
பிறப்பின் மோட்சத்தை
எப்போது தருவாய்..???

--பிசாசு-

நீயா பேசியது..!!!

கண்ணோடு கண் வைத்து
கனவுகளில் எனை தைத்து
காதலை கூட்டியவளே
காதலை மடித்து உன் -கக்கத்தில்
வைத்துக்கொண்டு
காணாது தேடுவது ஏனோ…??

மடியோடு தலை சாய்ந்து
மனதோடு உறவாடி உயிரின் நிழலாய்
உடன் வந்தவளே- மறந்துவிடு என்று
மட்டும் சொல்லிவிட்டு
திசைமாறி நீ போவதேனோ..??ஃ


மொளனமாய் காதலிசைத்து
உருவமாய் என்னுள் சிலைசெய்து
உயிர் தந்து உணர்வூட்டிய
தேவதையே- சிலையுடைத்து மண்ணாக்கி
நீ மாயமானதேனோ..???


கவிதைகள் நானெழுத
காற்றாகி எனை நீ தீண்ட
கற்பனைகளிலும் பற்றியதடி
காதல் தீ- கண்ணீரை கடன் வாங்கி
காதலணைக்க நான் பித்தனாகினேன்..!!!


நிசப்த இரவில் நீயும் நானும்
நிலவின் ஒளியில் தேடிய தேடலின்
முடிவில் வார்த்தைகளே மரணித்து
மொளனங்களில் உடைந்தது நம் இடைவெளியின்
கண்ணாடி குவளைகள்- சிதறிய துகள்களில்
வந்து போகும் உன் விம்பங்களிடம்
கேட்கின்றேன் “நீயா பேசியது”
இனி என்னோடு பேசாதே என்று..!!!

-பிசாசு-




Saturday, October 8, 2016

காதலின் இறுதிவரை..!!!

உன்னாலே உயிர் பெற்று
உணர்வுகளை சுவாசிக்கின்றேன்

உன் பிரிவுகளிலும் 
நான் பிரியப்படுவது -என்
உயிர் எனைவிட்டு
பிரிவதையே சகியே..!!!

அடைக்கலம் கேட்கின்றேன்
நான் உனக்குள் மட்டும்
ஆயுள் தண்டனையில்
சிறைகைதியாய்..!!!


என் ஒவ்வொரு நாளும்
உனக்காய் உன்  மடியினில்
மட்டுமே விடிய
ஆசைப்படுகின்றேன்
எனக்குள் நீ விடியலாய்
வாழ்வதால்..!!!


உனை சிந்திக்க மறந்தால்
என் இதயம் 
சின்னாபின்னமாகின்றது
சந்திக்க வேண்டுமென்று 
கதறி அழுகின்றது
அது உயிர்ப்பதாயினும் 
துடிப்பதாயினும் உனக்காகவே 
வேண்டுமென்கின்றதடி சகியே..!!!

வாழும் நாட்கள் உனக்காகவே
நகரும் போது உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்..!!!


என்னவளே எனக்குள்
உயிராய் கலந்தவளே..!!!
உன்னதமானவளே 
உணர்ச்சிகளையும்
உடைத்தெறிந்து
உயிராய் காதலை  
சுமந்தவளே..!!


எனக்குள்ளேயே 
தொலைந்துவிடு நீ
உனக்குள்ளே -என்னை 
நான் தேடி
நாம் வாழ்ந்துவிடுவோம்
காதலின் இறுதிவரை..!!!
-பிசாசு-


கோடி உறவுகள் வேண்டாம்

அழும் போது ஆறுதலாய்
விழும் போது தாங்குதலாய்
இருக்கும் உறவுகளுக்காய்
எப்பொழுதும் ஏங்குதலாய்
என்னிதயம் துடிக்கின்றது
கிடைக்காத அந்த
உறவுகளுக்காய்..!!!


பூவில் வாழும் வாசமாய்
காற்றில் கலந்த சுவாசமாய்
முப்பொழுதும் நேசமாய் பாசம்
காட்டும் உணர்வுகளுக்காய்
காத்திருந்தே
கடந்துபோகின்றது- என் நிமிடங்கள்
நிலையற்ற அந்த
உரிமைகளுக்காய்..!!!

பேசும் வார்த்தையில் 
அன்பில்லாத உறவுகளும்
வாழும் வாழ்க்கையில்
தொடராத உறவுகளும்..!!!
கூடி நின்று ஒப்பாரி வைத்து
ஓடி வந்து தூக்கிப்போக
நாலு உறவுகள் போதும்
கோடி உறவுகள் ஏன் வேண்டும்..???
வேசம் கொண்ட இந்த பூமியில்..!!!!
-பிசாசு-


உன்னோடு இருந்த ஒரு பொழுது

ஆழ்கடல் முத்துக்களாய்
மின்னிடும் உன் புன்னகையில்
எத்தனை யுகங்கள் தான் நான்
உயிர்த்திருந்தேன்..!!!

சில்லென்ற காற்றில்
கலந்துவந்த உன் குளிர்
வார்த்தையின்
துளிகளின் சாரல்களில்
எத்தனை கவிதைகள் தான்
நான் எழுதியிருந்தேன்..!!!


கட்டுண்டு கிடந்த என்
கைவிலங்குகளை ஒரு
நிமிடதொடுகையில்
உடைத்றெிந்த உன் ஸ்பரிசத்தில்
எத்தனை சொர்கங்களை
நான் கண்டிருப்பேன்..!!!

உள்ளங்கள் இணைந்த நம்மில்
உதடுகள் இணைகையில்
காதலும் மோட்சம் கண்டதை -உன்
கண்களில் நான் காணும்போது
எத்தனை ஜென்மங்கள்
நான் எடுத்திருப்பேன்..!!!


கொஞ்சம் வேகமாய்
கொஞ்சம் மேகமாய் தவழ்ந்து போன
வசு வண்டியின் இருக்கையில்
என் தோளில் நீ சாய்கையில்
எத்தனை கற்பனைகளை நான்
கடந்திருப்பேன்..!!!


ஒரு பொழுது உன்னோடு
நான் பயணிக்கையில்
என் முப்பொழுதும்
மறந்து புதுபொழிவு கண்ட
என் ஜீவனின்று
எத்தனை பொழுதுகளை கடந்தாலும்



“உன்னோடு இருந்த பொழுதுகளையே
சுவாசித்து உயிர்வாழ்ந்து கிடக்கின்றது”
மீண்டுமொரு ஒரு பொழுதுக்காய்..!!!

-பிசாசு-

ஒற்றை முத்தத்தில்

கொட்டும் மழையிலும்
கொளுத்தும் வெயிலிலும்
கவிதைகளாய்
காதலை கட்டிக்கொண்டு
புறண்டுகிடக்கின்றது
என் நாட்குறிப்பேடுகள்..!!!


பசியின்றியும் தூக்கமின்றியும்
நினைவுகளாய் காதலை
ருசித்துக்கொண்டு
உயிர்பித்துக்கிடக்கின்றது
என் கனவுகள்..!!!

சிரிப்பின்றியும் களிப்பின்றியும்
மௌனமாய் தன் காதலை
தியானித்துக் கொண்டு
திரிகின்றது
என் உதடுகள்..!!!

உயிரின்றியும் உடலின்றியும்
காற்றாய் கலந்து அலைந்து
தன் காதலை
தேடிக்கொண்டிருக்கின்றது
என் உணர்வுகள்..!!!

அன்பே
ஏக்கத்திலும் தூக்கத்திலும்
உன் பக்கத்திலே வாழ்ந்துக்கொண்டு
இருக்கும் என் காதலுக்கு- ஒரு
முத்தத்திலேனும் உன் காதலை
ஒரு வார்த்தைச்சேர்த்து சொல்லிவிடு
இறந்தாலும் அந்நிமிடம்
சொர்க்கமாய் மாறிவிடும்..!!!!
-பிசாசு-

Sunday, October 2, 2016

மாற்றம்

“தாரமாய் வருவேன்” என்றவள்
தூரமாய் போய்விட
பாரமாய் ஆனது என் காதல்..!!!
உயிரும் என்னைவிட்டு
வேகமாய் போனது.!!!


தேகமாய் சேர்த்தவள்
தாகமாய் இருந்த என்னில்
மேகமாய் பொழிந்து
காதல் தாகம் தீர்த்தாளே
சோகமாய் எனை தாக்கி
பாதை மாறி மாற்றிப்போனாளே..!!!


அவளை மறக்க நினைக்க
இதயத்தில் இடிமுழக்கமாய் எழ
உடலெல்லாம் மின்னல் தாக்கமாய் விழ
கண்களிலே கன மழை..!!!



அவளை நினைக்க நினைக்க
கற்பனைகள் கடலாய் பிறக்க
தனிமையெல்லாம்
இனிமையாக்க
வெள்ளை தாளிலே
“கவிதை மழை"
-பிசாசு-

முதலில் உன்னைத்தான்
கண்கள் பார்க்கத்தான்
காதல் கொள்ளத்தான்
#இதயம் கேட்டது..!!!

இமைகள் திறந்துத்தான்
இமைக்க மறுக்கத்தான்
கண்கள் இரண்தாடும்தான்
#காதல் கொண்டது..!!!


கனவில் உன்னைதான்
காண எண்ணித்தான்
கட்டியணைக்கதான்
#இரவும் நீண்டது..!!!

நீயும் பெண்ணாகத்தான்
நானும் ஆணாகத்தான்
காதல் தானாகத்தான்
வந்துபோகத்தான்
#தீயும் மூண்டது..!!!

காதல் நீயாகத்தான்
கவிதை தேனாகத்தான்
சேர்ந்திருக்கத்தான்
#உறவும் பிறந்தது..!!!


-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...