Saturday, November 25, 2017

பிரபஞ்சத்தின் அழகியே..!!!

பிரபஞ்சத்தின் அழகியே
அழகின் அகராதி நீ
உன்னழகை 
ஆரதிப்பவன் நான்

வலைந்து நெளிந்த
கூந்தலில் வார்த்தைகள்
தொலைத்தேன்
நீண்டு விரிந்த புருவமதில்
அதிசயம் 
கொண்டேன்..!!!

மூடித்திறந்த இமைகளில்
இராபகல் உணர்ந்தேன்
உன் விழியம்பு தாக்கி
என்னிதய துடிப்பை 
இழந்தேன்..!!!

சிந்தி சிதறும்
வெள்ளந்தி சிரிப்பில்
சிறு வெட்கம் நானும் 
வரைந்தேன்

உன்னழகை 
பேரழகாக்கும்
அதிசயங்களிரண்டை
எழுதிட ஏனோ பயந்தேன்..!!!


பிரபஞ்சத்தின் அழகியே..!!!


உன் அருகில் வாழ்வதே
வரமென தவம் ஒன்று
நான் கொண்டேன்..!!!

-பிசாசு-

Friday, November 24, 2017

தடை..!!!

நேரம் கூடிவர
நேசமும் சேர்ந்துகொள்ள
காதலர்களாகினர்
இவர்கள்…!!!


காலங்கள் பல கடந்து
காதலுக்கு மரியாதைசெய்ய
இல்லறத்தில்
இணைந்திட இரு இதயங்கள்
ஒன்றாகின…!!!

ஓர் நாள்
சாக்கடை மலரொன்று
சந்தன மரத்துடன்
சல்லாபமா என்றும்

மறுநாள்
தாழ்வான ஓர் குலம்
உயர்வான குலத்தோடு
குதூகலமா என்றும்

பிரித்து வைத்து
பெரு மூச்சு விட்டது
ஓர் கூட்டம்..!!!

தடைகள் தாண்டி
தன் காதலுக்காய் போராடி
ஒன்றாய் இனணைவதில்
தோற்று போயின அந்த
இரு இதயங்கள்…!!!

முடிவுகள் மாறின
இன்று
இவர்கள்
கல்லறையிலும்
காதலர்களாம்..!!!

காதலின் மறுவடிவம்
கல்லறைதான் என்றால்
ஏன் இந்த காதல்
இந்த பூமியில்..???

வகுப்புவாதங்கள் பேசி
வகுத்துப் பார்க்கும்
வக்கிரக்காரர்களின்

வரட்டுக்கவுரவத்திற்குள்...
அகப்பட்டு அழிந்துபோகிறது..!!!

காதலிக்கும் இதயங்களை மறுத்து
உயர்வு தாழ்வென்றும்
ஜாதி மதமென்றும்
போதங்கள் பல கொண்டு
காதலை ஏன் சாகடிக்க வேண்டும்..???

மனிதநேயம்
மறந்த மனிதர்கள் வாழும்
பூமியை விட்டு பறந்து போன
அந்த இரு இதயங்களும்
தமக்கானதாய் ஓர் உலகத்தில்
காதலித்துகொண்டிருக்கும்
அங்கே
இந்த மனிதர்களுக்கு
தடைவிதிக்கப்பட்டிருக்கும்….!!!!

-பிசாசு-

Monday, November 20, 2017

நீ மட்டும் தான்

உன்னை பிரிந்து வாழ 
மனமில்லை
மறந்து போகவும் 
தைரியமும் இல்லை
பின் எப்படி உன்னை விட்டு 
நான் போவேன்..???
முயற்சிக்கவே 
முடியாதுபோகத்தான் -உன் 
மூச்சோடு நான் கலந்து 
இப்படியானேன்..!!!


என் சகியே..???

ஒரு நொடி பிரிந்தாலும் 
மறு நொடி இறந்துபோகும்
என்னியத்தை 
எதைக்கொண்டு 
எப்படி நான் மூடி வைப்பேன்..???

ஆசைகளை அடக்கி 
ஆளத்தெரியவில்லை
உன்னை போல்
அன்பை கூட பூட்டிவைக்க 
தெரியவில்லை..!!!

தெரிந்ததெல்லாம்
ஒன்றேதான் 
அதுவும் நீ மட்டும் தான் சகியே...!!!

-பிசாசு-😈😈😈

Saturday, November 18, 2017

உனக்காக...!!!


சொந்தங்கள் தடுத்தலென்ன
பந்தங்கள் படை
கொண்டெழுந்தால் என்ன
கௌரவம் ஜாதியென்று கை நீட்டி
பணம் பதவி அதிகாரம் செய்தாலென்ன
இவற்றையெல்லாம்
கடந்து வெல்லும் உண்மை காதல்
சொந்தங்களையும் பந்தங்களையும்
சேர்த்து வாழும் உண்மை காதல்..!!!

-பிசாசு-


பிரிந்தோம் என்று நினைக்காதே
தனிமையில் நாம் இன்னும் அதிகமாய்
காதலிக்கின்றோம்..!!!
மறந்தோம் என்று மறந்திடாதே
மனம் முழுவதும்
நினைவை நிரப்பியிருக்கின்றோம் ..!!!
பாரா முகமாய் கடந்துபோகின்றோம்
என்றெண்ணி பைத்தியமாகாதே
பார்க்கும் இடமெல்லாம் நம் முகங்களின்
நகழ் விழுவதை மறுக்காதே..!!!
அன்பே…!!!
இறப்போம் நாம் சேராது
கடப்போம் வலி தாங்காது
என்றெல்லாம் வழிமாறி நீ போகாதே
ஒரு நொடியேனும் ஒன்றாய் வாழ்ந்து
மடிதனில் மரணிப்போம் மறவாதே..!!!

-பிசாசு-




Monday, November 13, 2017

அன்பே



மடி மீதிரு
விரல் கோர்த்திடு
முடி கோதிடு
முகம் துடைத்திடு
இதழ் தந்திடு
மனம் பேசிடு
கேள்வி கேளாது இதயம்
இடம் மாற்றிடு..!!!


-பிசாசு-

Saturday, October 28, 2017

கொடுமை

தீக்கொண்டழிந்தது
நஞ்சுண்டு இறந்தது
நாண் கொண்டழியுமோ
இன்னொரு பறவையின் கூட்டம்???

அத்தியாவசியங்கள் வந்தழித்தது
துரோகமும் சேர்ந்தொழித்தது
வேகமாய் மனம் நினைத்து
மானமும் மண்ணில் புதைந்து.....!

பறவைகள் பெற்றதில்
வட்டிகள் குட்டிகளிட்டதில்
அழிந்தன குஞ்சுகள்
பாவம் செய்ததும்
ஏமாற்றம் கொண்டதும் என்னவோ
குஞ்சுகளின் பறவைகள்....!

ஏன் இந்த கொடுமைகள்???
எதற்காக இந்த தற்கொலைகள்.???

ஆடம்பரங்களுக்கு அடிமையாகி
ஆசைகள் கொண்டழிந்து
பேராசைகளில் உயிர் இழக்கும்
மனங்களாய் மனித மனங்கள்
மாறியதாலோ

தேவைகள் எதுவென்று
அறிந்து தீர்க மறந்து
தேவையில்லா
ஆடம்பரங்களில் விழுந்து
அழிந்து போவதினாலோ...????

பிசாசு

Wednesday, October 25, 2017

தயவு செய்து வேண்டாம்

காதலை முறிக்காதீர் அது ஒன்றும்
மரக்கிளை அல்ல..
காதலை எறிக்காதீர் அது என்றும்
பழைய காகிதம் அல்ல..
காதலை தூற்றாதீர் அது ஒன்றும்
தவறான வார்த்தை அல்ல…
காதலை கசக்காதீர் அது ஒன்றும்
எழுத்துப் பிழையல்ல..
காதலை புதைக்காதீர் அது என்றும்
உயிரற்ற உடல் அல்ல…
காதலை மறுக்காதீர் அது ஒன்றும்
ஜாதி மதம் அல்ல…
மறந்தும் கூட காதலை
விலை பேசாதீர்- அது வியாபார சந்தையல்ல…!!!

உணர்வுகள் உணர்சிகள் கொண்டு
கருவுற்று காதலில் இணைந்த இதயங்களை
பொருள் பணம்  அந்தஸ்து கொண்டு
அறுத்துவிடாதீர்கள்


அறுத்துவிட்டு அழகு பார்க்க
காதல் ஒன்றும் தொப்புள்கொடி உறவல்ல..!!!
_பிசாசு_

Tuesday, October 24, 2017

கரை தொடும் அலையாய்
தரை தொடும் சருகாய்
உனை நான் தீண்டுகையில்
நானமதில் நீ உறைவாய்
பின் என் மார்தனில் 
துயில் கொள்வாய்..!!!


-பிசாசு-😈😈😈
............................................................................................................
எனை நான் மறந்து உனைதான் 
நினைக்கையில்
இதயம் இரண்டாகி துடிப்பதாய்
உணர்கின்றேன்

-பிசாசு-
😈😈😈
................................................................................................................
மௌனங்களையும்
கவிதையாக்கிட பழகினேன்
உன்னால்தான்
-பிசாசு-
😈😈😈

Tuesday, July 4, 2017

பேசடி...!!!

மௌனமாகவே
இருக்கின்றாயே சகியே
ஓர் வார்த்தை பேசடி
என் கிளியே..!!!


மூர்ச்சையாகி
மோட்சமாகிவிடுவேன் - இல்லை
முக்தி நிலையில்
முடிந்துவிடுவேன்..!!!

பிசாசு😈😈😈😈


கோபங்கள் தீரட்டுமடி

மேகங்கள் முத்தமிட
சிதறிய எச்சில் துளிகள்தான்
மழைத்துளிகளோ??

வா அன்பே
நனையாலம்
ஒரு காதலின் முத்த எச்சினில்


எட்டி ஓடாதே
எனையும் அப்படி
ஏறெடுத்துப் பார்க்காதே..!!

முதல் துளி நெற்றியில்
என் முத்த புள்ளியும்
அதே இடத்தில்..!!!

ஆடைகள் நனைந்து
அங்கங்கள் கடந்து
துளிகள் பயணிக்கலாம்...
என் விழிகள் என்னவோ
உன் விழிதாண்டி போக
நினைக்கவில்லையடி..!!!

சகியே அண்ணைபோல்
உன் ஆடைகொண்டு
நீ என் தலைதுவட்டும்
அந்த நிகழ்வுகளுக்காவே
ஆயிரம் முறை நனையாலமடி..!!!

வா அன்பே
கோபங்கள் களைய
மழையில் நனையலாம்..!!!

பிசாசு😈😈😈


Sunday, July 2, 2017

அழகி

நீ அழகின் அரசனால்
சேனை படைகொண்டு
உனை வெல்ல முடிந்திருக்கும்

அன்பில் அரண் அமைத்து
ஆளும் அழகியடி நீ
எப்படி உனை வெல்வேன்
போரிலா இல்லை என் உயிரிலா??
வழியொன்றை நீயே சொல்
வாழவேண்டும்
நான் உன்னோடு..!!!


#பிசாசு-

என் யாதுமாகியவளே

இந்த வையகம் முழுவதும்
நீ சிந்திய சிரிப்பொலியில்
சிதறிப்போய் கிடக்கின்றது
என் சிந்தனைகள்- தேடியெடுத்து
நெஞ்சோடு அணைத்து
பத்திரப்படுத்துகிறேன்
நான் கவிதையில்..!!!

காய்ந்த நிலமதில்
வீழ்ந்துடைந்துபோகும்
நீர்துளிகள் நீயாகிபோனாயடி

வறண்டுபோய்கிடந்த -என்
வாழ்க்கை வாசற்படியில்
கோலமிட்டு போகின்றது
உன் ஒன்றைகண் பார்வை..!!!

நீ மொளனமான பிறகும் கூட
வார்த்தைகள் ஒலிப்பதாய்
என் இதயம் மகிழ்கிறது
மறுவார்த்தை நீ பேசிடும்
போதுதான் அது உயிர்கொண்டு
துடிக்கிறது…!!!


மகிழ்சியை மட்டும்
தினம் கொடுப்பதாய்
சத்தியம் செய்த நீ
மோட்சத்தையும் கொடுத்தாயடி
உன் எச்சில் படாத முத்ததில்..!!!

#பிசாசு

பிரிவு

சகியே..
ஜனனம் ஒன்று
நான் கொண்டேன்
உனக்கே
உயிராகிடவேண்டித்தான்


மரணம் கூட
ஏற்றுக்கொள்வேன்- உன்
மடியினில்
கண்மூடிடடத்தான்…!!!

வானளவு நீளமான

உன் காதலில்
மேகமென தவழும்
பிரிவுகளில்
சிந்தியதென்னவோ
மழைத்துளிகள் அல்ல –என்
கண்ணீர்துளிகள்தான்..!!!

பிசாசு

Wednesday, May 24, 2017

காதல் நினைவு

உன் வெட்கங்களை
ரசிக்கவேண்டும் என்பதற்காகவே
அடிக்கடி
முத்தக்கோரிக்கை
முன்வைக்கிறேன் நான்..!!!


நிராகரிப்பு செய்யாத
நல்லதொரு அரசாங்கம்தான் நீ..!!!

பிசாசு😈😈😈😈😈😈


.............................................................................................

மரணிப்பதை பற்றி
ஒருபோதும் நான்
கவலைகொண்டதில்லை
அதற்குள் வாழ்ந்துவிட
வேண்டும்- உன் மடியில்..!!!


பிசாசு😈😈😈


........................................................................................


எனக்குள் இருக்கும்
என்னை எடுத்து
உன்னை எனக்குள்
தினம் சேமிக்கின்றேன்


சகியே..
இடம் போதவில்லையடி
கொஞ்சம் உயிர்வரை
வந்துபோவாயா..??


 
பிசாசு😈😈😈😈
.................................................................................

காதல் கொடுக்கப்படும்போது
அதிக சந்தோஷத்தையும்
அதே போல அவனி(ளி)டமிருந்து
கிடைக்கும் போது
மோட்சத்தையும் பெறுகிறது


#பிசாசு😈😈

😈
😈
😈

Saturday, May 20, 2017

புத்தம் மறந்த பித்தர்கள்

முள்ளிவாய்கால்
முற்றுபெறாதொரு ரகசியம்
தர்மதாயும் கற்பழிக்கப்பட்டு
அதர்ம நாய்களின்
அராஜகம்
அரங்கேறிய நாள்…!!!


முடவனே

யுத்தம் நீ கொள்ளவில்லை
பித்தம்கொண்டாடினாய்
புத்தன் வழி நடக்கவுமில்லை
பௌத்தனாய் நீ இருக்கவுமில்லை..!!!

மூடனே

துப்பாக்கி ரவைகளும்
செல்லடிகளும் கொண்டு -எம் வீரபெண்களை
வெல்ல முடியவில்லையென்று
காமவேட்டையில் தான்
வென்றிட முயன்றாய்..???

அரக்கனே

கருணை சொல்லி தந்தவளா
உங்கள் தாய்
இல்லை இல்லை..!!!
கட்டுப்பாடுகள் பற்றி கதை
கூறியவரா
உங்கள் தந்தை..???
இருக்கவே இருக்காது..!!!

புத்தன் சொன்ன கதைகளை
கேட்டவரா
நீங்கள் ஒருபோதுமில்லை..!!!
கால நேரம் கை கூடிவந்தாலும்
தாய் தங்கையோடும்
புணரும் இனம்தான் நீங்கள்…!!!


பித்தனே

கைகளை கட்டிப்போட்டு
கண்களை மூடிவிட்டு
ஆடையின்றி அம்மணமாயாக்கி
ஆன்மாவை பிரித்தது உங்கள்
கோழைத்தனம்…!!!

மார்பங்களை அறுத்து
யோனிகளை கிழித்த
உங்கள் நா
நிச்சயம் தாய்பால் குடித்து
வளர்ந்திருக்காது
சுக்கிலம் நீர்
குடித்ததாகியிருக்க வேண்டும்..!!!

சிறுபிள்ளை முதல்
வயதாகிபோன
பெண்கள் வரை
கற்பழிக்கப்பட்டு
கொலை செய்யப்பட்டு
பிணத்தோடும்
காமவெறி தீர்த்த
உங்கள் ஆண் குறிகள்
அழிந்துபோகட்டும்..!!!

பால் மனம் மாறா
பச்சிளம் என்று வாதம் செய்தது
தீவிரவாதம் செய்தது..??
நீங்கள் எல்லாம் அழிக்க நினைத்தது
ஆயுதம் தாங்கிய புலிகளையல்ல
ஆயிரமாண்டுகால
தமிழை..!!!


முள்வேலிக்குள் அன்று
மூடிவைத்துவிட
நீங்கள் நினைத்தது
முப்பதுவருட கனவை
தமிழ் உணர்வை
எங்கள் அடையாள சின்னத்தை..!!!

மேக்க புதுன்கே தேசயாய்”
என்று நீங்கள் கூவிக்கொண்டு
திரிவது நியாயம் என்றால்
தனிநாடு தமிழீழநாடு
என்று நாங்கள் உயிர்விட்டது
எந்தவகையில்
அநியாயம்..???

கலிகாலம் கொண்டு நீங்கள்
காவியுடை பூண்டு
இனவாதம் பேசிதிரியும்
போதகர்களே…

கடவுள் இருக்கின்றாரா
இது விடைதெரியா
கேள்வி அது போல்
காலம் மாறும்
கரிகாலன் காலம் வரும்


கணக்கை கச்சிதமாய் முடிக்க
ஒரு காலம் பிறக்கும்.
காத்திருப்போம்
கண்ணீருடன்.!!!

-பிசாசு-😈😈😈

Thursday, May 18, 2017

விடுபடா நினைவு..!!!

விபரீதம் தெரியாது 
காதல் தரையில் விழுந்து 
சுக்கு நூறாய் 
உடைந்தே போனது 
இதயம்..!!!

 

செடிகளை வெட்டி 
அழகுபார்க்கும் பாவை நீ 
பூக்களை கொய்து 
ஆசை தீர்க்கும் பேதையும் நீ 
உறவை எரித்து திருநீறு பூசும் 
அகோராதிபதியும் நீ 
காதலை ஒடித்து வைத்து 
புன்னகைக்கும் பைத்தியகாரியும் நீ 
என்றறியாது 
ஓர் காதல் கொண்டேன் …!!!

 

தீயறிந்தும் தீண்டும் 
விட்டில் பூச்சாய் 
உனை தேடிவர சுட்டெரிக்கின்றாயடி 
எனையும் 
எட்டிவைத்து பார்கின்றாயடி…!!!

வலிகளோடு 

வாழ்ந்திடவும் முடிந்ததடி 
என் காதல் ஒத்தடமிட்டு 
எனக்காக தாலாட்டுபாடி 
ஆறுதலாய் அணைத்து 
சொல்கின்றது -உன் 
அடிமை சங்கிலியில் 
விடுபடா உன் நினைவை 
மட்டும்கொண்டு 
எனை ஆட்சிசெய்கிறது…!!! 

-பிசாசு-

உயிர் வரை நீ

உறவாடிட 
உறவுகள் இல்லை
உரிமைகொண்டிட 

மனமில்லை
உனக்காக நானிங்கு 

உயிர்கொண்டேன்
என்று நீ வந்து சொல்ல
நொந்துபோன மனமொன்று
தளிர்விட்ட மரமானது 

உன்னால்….!!!

உடல் வரை மட்டும் 

காதல் வந்து போனது
பணம் மட்டும் வாழ்க்கையென்று
சொல்லி கருகிப்போனது
உயர் வழியில்லையென்று
தாழ்ந்துபோனது…
சதைகொண்ட 

பிண்டமாக
அழிகிப்போனது…!!!

கிழக்கில் சூரியனாய் 

நீ வந்தபோது
மனமிங்கு உருகொண்டது
மாறாத காதலொன்று 

நீ தந்தபோது
மனமிங்கு உனை கொண்டாடிட
உயிர் வரை அன்பே நீயே
உறவாகி கிடக்கின்றாய்…!!!

-பிசாசு

Wednesday, May 3, 2017

காதலை மரணம் வென்றது

பிறந்த நாள் முதல்
நான் வாழ்ந்த நாட்கள் 
உனக்காகத்தான்..

இணைசேர முடியா துருவங்களாய்
உயிர் சேர வழியில்லா உடல்களாய்
நீயும் நானும் தவித்து 
துடித்துக்கிடந்தோம்..!!!


ஏழ்மையில் பிறந்து
எளிமையில் வாழ்ந்தாலும்
என் காதல் மட்டும்
வெறுமையில் இருக்கவில்லை..!!!


உனை நினைத்தே
துடித்த என் இதயம்
துளைகளாய் துண்டாடி
தூள் தூளாய் உடைந்து 
போனதேனோ அன்பே..!!!!


ஜாதி மதங்கள் எம்மை 
பிரித்து வைத்து சிரித்தது...
காதல் மனம் நம்மை 
இணைத்து வைத்து ரசித்தது....
பேதை உன் எண்ணம் 
என்னுள் இரண்டர கலந்தது
பாதை மாறி போகா நம் காதலால் மட்டும் 
எப்படி முடிந்தது..???


சேர்ந்திடத்தான் காதலித்தோம்
வாழ்ந்திடத்தான் 
கட்டியணைத்தோம்
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
ஒழிந்துக்கொள்ளத்தான் ஓடி திரிந்தோம்

விதி செய்த சதியா அன்பே
பிரியாத நம் காதல்
பிரித்திட முடியாத நம் உறவு
மண்ணுக்குள் மண்ணாய் போனது
காதலை மரணம் வந்து  எப்படி 
வென்றது..,?????

-பிசாசு-

Friday, April 21, 2017

உன் நினைவில்

நெடுந்தூர பயணமதில்
நீ 😍😍
துணையாக வேண்டும்

இளைபாறிட வேண்டுகையில்
உன் 😍😍
மடி எனை தாங்க வேண்டும்


முடியாததொரு
வானமாய் அது என்றும்
நீள வேண்டும்
ஒரு வேளை
அது முடிகின்ற வேளை வந்தால்
உன் மடியிலே நான்
இறக்க வேண்டும்...!!!

#பிசாசு😈😈😈😈

....................................................................................


முத்த மழை பொழியும்
மேகம் நீயடி😍😍😍
நெற்றியிலே
முதல் துளி விழ
காத்திருக்கும்
நிலம் நானடி🤔🤔🤔


#பிசாசு😈😈😈
................................................................................
உன் நிழலில் அமர்ந்தே
என் ஆயுள் கூடுதடி🤔🤔
உன் உயிரில் கலந்தே
அது நூறுஜென்மம் ஆகுதடி🤔🤔


சகியே…..


என் காதலுக்கு உன் உயிரை கொடுத்தாய்
அது உரு பெற்றதடி😍😍
என் கவிதைகளுக்கு உன் ஆயுள் கொடுத்தாய்
அது உயிர் பெற்றதடி 😍😍
என் கனவுகளுக்கு உன் நிறம் கொடுத்தாய்
அது முடியாமது தொடறுதடி😍😍
என் கண்களுக்கு உன் பார்வை கொடுத்தாய்
உலகமே உன்னால் அழகானதடி😍😍


மறுஜென்மம் ஒன்றை தந்தாய்
எத்தனை முறை நான் இறந்தாலும்
என்னோடு இறந்து
எனக்கெனவே நீயும் மறுபடியும்
பிறக்கின்றாய்😽😽😽😽


#பிசாசு😈😈😈

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...