Friday, September 16, 2016

பௌர்ணமி இரவில்
கடற்கரை மணலில் -உன்
கால்தடம் தேடித் தேடி என்
கண்களோடு
காதலும் கடலலையாய்
அலைமோதி திரியுதடி
பெண்ணே..!!!


நீ வந்துப்போன வாசம் மட்டும்
என் சுவாத்தில் கலந்து
உன்னறிமுகம் சொல்ல
மூடிய கண்கள் ஒரு நிமிடம்
உன்னை நினைக்க
நுரையீரல் வரை உன்
வாசத்தை ஆழ்ந்து சுவாசிக்கின்றதடி
காதலும் இதயத்தின் மோதலும்..!!!

ஒரு ஓரமாய் உன் பாதச்சுவடு
தடம் பதித்துப்போக
சந்தோஷத்தில்
மண்லெல்லாம் அள்ளி அள்ளி
நெஞ்சோடு பூசிக்கொண்டு
பித்தனாகி தேடுதடி உன் முகம்தனை
என் காதல்..!!!

ஒளிந்து விளையாடியது போதுமடி
ஓரங்க நாடகம் அரங்கேற்றி
என்னை ஒதிக்கி வைத்ததும் போதுடி
என் உறவே
காதலின் பௌர்ணமி நிலவே
பால் முகம் காட்டிவிடு
என் காதலுக்கு தாகம் தீர்த்துவிடு..!!!
-பிசாசு-

2 comments:

  1. பௌர்ணமி இரவில் கடற்கரையில், அல்லது ஏரியிலோ நின்று நிலவை ரசிக்கப்பிடிக்கும். இன்று உங்கள் கவிதையை படித்ததும் கவிதையுடன் மனதிற்கு இதமான பாடலையும் சேர்த்துக் கேட்க பிடிக்கிறது. காதலும் கவிதையும் இரவுக்கும் நிலவிற்கும் தான் எப்போதுமே சொந்தமா?

    ReplyDelete
  2. பௌர்ணமி இரவில் கடற்கரையில், அல்லது ஏரியிலோ நின்று நிலவை ரசிக்கப்பிடிக்கும். இன்று உங்கள் கவிதையை படித்ததும் கவிதையுடன் மனதிற்கு இதமான பாடலையும் சேர்த்துக் கேட்க பிடிக்கிறது. காதலும் கவிதையும் இரவுக்கும் நிலவிற்கும் தான் எப்போதுமே சொந்தமா?

    ReplyDelete

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...