குடும்பங்கள்
மஞ்சள் முகம் பார்த்து
மனம் விட்டு தினம் பேச
ஒளி தந்த பொக்கிஷம்..!!
அவசரத்திற்கு
தாள் கொண்டு தீப்பற்ற
தன்னை தியாகித்த
பொக்கிஷம்...!!
முத்தும் பவளமும்
பொக்கிஷம் என்றால்
அன்று பல மேதைகளை உருவாக்கி
புத்தகங்களுக்கு உயிர்கொடுத்த
இது அல்லவோ ஒளி கொண்ட
பொக்கிஷம்...!!!
இன்று
தேவையில்லை என்று யாரும்
தூரம் எறியவில்லை
தூசு தட்டி எடுக்க
நேரம் வருமென்று
ஓரமாய் வைக்கப்பட்டிருக்கின்றது
மின் தடைகளின் போது
-பிசாசு-
😈
😈
😈



No comments:
Post a Comment