என் வீட்டு ஜன்னல் பக்கமாய்
மண்விட்டு விண் தொட்டு பறந்து
வருகின்றது என் மனம்
உன் இடம் நோக்கி…!!!
பால் போலவே வான் மீதிலே
நீ உலா போகவே
என் காதலும் கனா காண்கிறது
உன்னோடு வாழ்ந்துவிடவே
அது இந்த பூமியில் தவம் கிடக்கின்றது..!!!
ஏய் நிலவு பெண்ணே..!!!
காதல் மோகம் உன் மீது
கூடிபோயிருக்க
மேகத்தில் நீ மறையும்
நொடிகலெல்லாம்
நான் தாகத்தில்
தவிக்கின்றேனடி
உன்னை சேர்ந்திட தான்
தேகம் தேய்ந்து யாகம்
செய்கின்றேனடி
யாகம் தீரும் நேரம்
என் தேகம் உன்னை சேருமோ..???
தேகம் சேராவிட்டால்
மண்ணோடு மண்ணாகி
உன்னில் வந்து கலந்திடுமோ..???
பிசாசு
No comments:
Post a Comment