நான் கண்ட சோகங்களை
எல்லாம் நீ கொண்ட காதலில்
சுமந்தவளே என்னவளே..!!!
எத்தனை ரணங்கள்
எத்தனை ஏமாற்றங்கள்
அத்தனையும் மறந்து நான்
புன்னகைத்திருப்பது
உன்னாலே..!!!
பாரமாய் நான் இருக்க
உன் விழியோரமாய் எனை சுமந்து
கண்ணீரை துடைத்தவளே..!!!
சிலையான என்னை
சிரிக்க வைத்தவளே
என் உத்தமியே..!!!
உடல் கொண்ட காதல் எல்லாம்
மண்ணாகி போயிருக்க
மனம் தந்த உன் காதல் மணக்குதடி
என் வாழ்வில்..!!!
சின்ன சின்ன சண்டைகள்
சிங்கார சில்மிசங்கள்
மிச்சமே வைக்க முடியாத
உன் அழகை பருகி
அன்பில் உருகி எழுதி திளைக்கின்றேன்
இங்கு ஒரு கிறுக்கள்..!!!
காதலியாய் வந்து
என் ஓர் அன்னையாகி
மரணத்தை கொன்று நீ
ஜனனத்தை கொடுத்த
என் தாயுமானவளே..!!
மறு பிறப்பிலும் நான்
வேதனையில் பிறந்திட
நீயே வந்துவிடு காதலாய்
காயங்கள் ஆற்றி ஆறுதலாய்..!!!
-பிசாசு
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Wednesday, June 20, 2018
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment