Wednesday, June 20, 2018

சொல்ல மறுக்கும்
உன்சின்ன மெளனத்திற்கு நடுவில்
என் மொத்த மொழிகளையும்
வாரிக்கொண்டாய்..!!!

ஊடல் நீ கொண்டாய் என்று
ஒதுக்கிடவும் முடியவில்லை
கோபம்தான் கொண்டாய் எப்படியென்று
கோபிக்கவும் இயலவில்லை
இரண்டுக்கும் நடுவில் எனை
இம்சை செய்கிறாய்
பிடிவாதக்காரியாய்….!!!

உன்னுள்ளே இருக்கும் ஓரனப்பில்
நீ பார்க்கும் பார்வையில்தான்
என்னிதயம் லேசாகுமென்றால்
உன் மௌனத்தை இப்படியே
வைத்துக்கொள்- நான் தினம் தினம்
வார்த்தைகளை தேடியே திறிகின்றேன்..!!!

மெளனம் கலைத்து பேச நீ விரும்பினால்
இறுதியாய் ஓர் வழி செய்
அஞ்சலில்
“காதல் அஞ்சலியாய்”
இல்லையேல்
கண்ணீர் அஞ்சலியாய்..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...