மங்கை அவளின்
மனம் மறந்து போனது
மானிடம்
ஆடை விழக்கி
அதில் சுகம் தேடும்
ஆண் வர்கம்
வெட்கப்பட வேண்டியது
ஆணாய் பிறந்ததற்கு
வரலாற்றில்
சேலை கொடுத்த கேசவன்
இன்று எங்கே சென்றான்..??
அவனும் செல்பி
எடுத்துக்கொண்டிருந்தானோ
ராதையின் கூடாரத்தில்..???
சுற்றியிருந்தவர் நூறு
ஒரு துளியளவு கூடவா
துனிவுமில்லாது போனது
துணியும் இல்லாது போனது
இவள் தேகத்தை மறைக்க..???
கலியுகம்தானிது
கமராக்கலில் இருந்து
காம ராஜாக்கள்
பிறந்திருப்பதால்..!!!
பிசாசு




No comments:
Post a Comment