இதயத்தில் கருவறைக்கொண்டு
பிரசவம் இல்லாமாலே
என்னை பெற்டெடுத்த
இதய தெய்வம் என் அப்பா..!!
ஆசைககள் மறந்து
ஆடம்பரங்கள் கடந்து
தன் அத்தியாவசியங்களிலும்
அரை வயிறு நிரப்பி
துறவியாக வாழ்ந்தே
இல்லறத்தை நல்லறமாக்கிய
ஞானி என் அப்பா..!!
வறுமைகள் வாட்டியபோதும்
அதன் நிழல் கூட
பிள்ளை மீது வீழ்ந்திடாது
காத்தவர் என் அப்பா..!!
தனக்கென்று ஓர் ஆடை வாங்கும் போது
விலைபார்த்து எனக்கென்று மட்டும்
தரத்தை பார்த்து
சிரித்து மகிழ்ந்தவர் என் அப்பா..!!!
அன்று தேயிலைக்கடியிலும்
அட்டைகடியிலும்
வியர்வை துளியிலும்
நீ எழுதிய என் தலையெழுத்துதான்
இன்றென்னை குளிர்சாதன
அறையிலும்
குளு குளு ஏசியிலும் தூசுபடாது
வாழ வைக்கின்றது…!!!
ஆசைககள் மறந்து
ஆடம்பரங்கள் கடந்து
தன் அத்தியாவசியங்களிலும்
அரை வயிறு நிரப்பி
துறவியாக வாழ்ந்தே
இல்லறத்தை நல்லறமாக்கிய
ஞானி என் அப்பா..!!!
பிசாசு
No comments:
Post a Comment