Thursday, June 21, 2018

ஒரு செடியில் இரு மலர்கள் 
வாசம் எப்படி வேறானதோ
பாசம் ஏன் வேசம் போட்டதோ???


ஒரே தாய் வயிற்றில்தான் 
வாடகைக்கொண்டோம் அங்கு 
அறைகள் ஏதும் வேறானதோ??
அன்பு இல்லா பிண்டமாய் பிறந்ததோ..??


ஒரே மார்பில் பால்சுவைத்து 
அதே குரலில் தாலாட்டுக்கேட்டு
அன்பு மடியில் 
தவழ்ந்துகிடந்தவர்கள் தான் -நாம் 
பின் எப்படி எனக்கு மட்டும் 
இப்படி தனிமை வந்து குந்திக்கொண்டது..??


காம்பினில் பூத்த மலரென்றுதான் 
விரல் தொடுத்துப் பறிக்க நினைத்தேன்
மலர்கள் எல்லாம் முற்களாய் 
முகம் மாறியதை 
எப்படியம்மா மறந்து போனேன்..???


உறவுகள் தொடர்கதை 
சொல்ல நான் கேட்டேன்
உண்மைதான் எனக்கு மட்டுமேனோ 
கதையேதுமின்றி தொடர்கின்றது 
உறவுகள் எல்லாம் 
உணர்வுகளற்ற கற்களாய்..!!!


பாசம் என்று நான் 
எண்ணியதெல்லாம் 
வேஷம் போடும்
நாடகமாய் போனது
கதைகள் முடிந்து பாத்திரங்கள் 
கலைந்ததும்
வெறும் மேடையாய் 
நானானேன்..!!!


உறவுகள் இருந்தும் 
அநாதையாக 
தனிமையில் தவிக்கின்றேன்..!!!


தாங்கிடுவார் யாரோ?? 
பின் அவரும் தனிமையில் 
தள்ளிடுவாரோ..???
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...